பாராளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மத்திய அரசு முடிவு
கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வந்த பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா, டெல்லி மேல்-சபையில் நேற்று அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்ற மக்களவையிலும் நிறைவேற்றியபின், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று முறைப்படி அந்த சட்ட மசோதா அமலுக்கு வரும்.
பாராளுமன்ற மக்களவையில், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட கடைசி நாளான மே 7-ந் தேதிக்குள் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிடும் என்றும் பன்சால் தெரிவித்தார்.



del.icio.us
Digg
