அமெரிக்காவில் நியூயார்க் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் வெளியேற்றம்

Font size: Decrease font Enlarge font
image

 அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜான்.எப். கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது எப்போதும் பரபரப்பாக இயங்க கூடியது. நேற்று அமெரிக்காவின் சுதந்திரதினம். எனவே, தேசிய விடுமுறை நாளான நேற்று ஏராளமானவர்கள் சுற்றுலா சென்றனர்.
 
எனவே, விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே மாலை 5.40 மணி அளவில் விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு பெண் டெலிபோன் செய்தாள்.
 
அதில் அவள் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்தாள்.
 
இதனால் பரபரப்பான ஊழியர்கள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவசர நேரத்தில் செயல்படும் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்
 
இதையடுத்து பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையம் முழுவதும் சோதனையிடப்பட்டது. இதனால் பயணிகளுக் கிடையே பதட்டமும் பீதியும் ஏற்பட்டது. முடிவில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை.

வெறும் புரளி என தெரியவந்தது. இருந்தும் இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பரவியது. எனவே அனைத்து விமான நிலையங்களிலும் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
 
இதற்கிடையே விமான நிலையத்துக்கு டெலிபோனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement