உலக கோப்பை ஆக்கி ஆலந்து- தென்கொரியா இன்று பலப்பரீட்சை: இந்தியா 7-வது இடத்துக்கு மோதல்

Font size: Decrease font Enlarge font
image

உலக கோப்பை ஆக்கிப்போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
 
“பி” பிரிவில் நேற்று நடந்த கடைசி “லீக்” ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும், ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் தோற்கடித்தன. இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் “டிரா” ஆனது.
 
“லீக்” முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றன. கோல் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், இங்கிலாந்து 2-வது இடத்தையும் பிடித்தன. இந்த 2 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின் அணி 9 புள்ளிகள் பெற்றது. அந்த அணி 5-வது இடத்துக்கான போட்டியில் மோதும்.
 
இந்திய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. கோல் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை முந்தியது. இதனால் இந்திய அணி 7-வது இடத்துக்கான போட்டியில் மோதுகிறது.
 
தென்ஆப்பிரிக்கா 9-வது இடத்துக்கான போட்டியிலும், பாகிஸ்தான் 11-வது இடத்துக்கான போட்டியிலும் மோதும்.
 
“ஏ” பிரிவில் இன்று நடைபெறும் கடைசி “லீக்” ஆட்டங்களில் ஜெர்மனி- நியூசிலாந்து (மாலை 4.35 மணி), ஆலந்து- தென்கொரியா (மாலை 6.35), கனடா- அர்ஜென்டினா (இரவு 8.35) அணிகள் மோதுகின்றன.
 
ஆலந்து அணி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. கோல் வித்தியாசமும் அதிகமாக இருப்பதால் அந்த அணி அரை இறுதியை உறுதி செய்துவிட்டது. கனடா, அர்ஜென்டினா அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.
 
ஜெர்மனி, கொரியா, நியூசிலாந்து இடையே போட்டி நிலவுகிறது. இன்றைய போட்டியில் ஜெர்மனி அணி நியூசிலாந்தை வென்றால் அரை இறுதிக்கு நுழைந்து விடும்.
 
தென்கொரியா ஆலந்தை வென்று ஜெர்மனி தனது ஆட்டத்தில் தோற்றால் தென்கொரியா தகுதி பெறும். நியூசிலாந்து தகுதி பெற வேண்டுமானால் அந்த அணி ஜெர்மனியை வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ஆலந்திடம் தென்கொரியா தோற்க வேண்டும்.

  • email Email to a friend
  • print Print version
Advertisement

Advertisement