<rss version="2.0" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
	<generator>Vivvo CMS 4.1</generator>
	<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
	<link>http://www.viparam.com/</link>
	<copyright>&amp;copy;2007 Spoonlabsd.o.o.</copyright>
	<image>
		<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
		<url>http://www.viparam.com/files.php?file=</url>
		<link>http://www.viparam.com/</link>
	</image>
	
			
				
					<item>
						
							<title>காங்கிரஸுடன் பேரம் நடத்தவே என் கைது!</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47675.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/jkljk_408527248.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Fri, 30 Jul 2010 11:00:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;'இருப்பாய் தமிழா நெருப்பாய்...' என்ற சொற்களுக்கு ஏற்ப, நீதிமன்ற வாசலில் நெருப்பாகவே ஜுவாலை வீசினர், 'நாம் தமிழர்' இயக்கத்தினர். 'இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக'க் கைது செய்யப் பட்ட இயக்குநர் சீமானை, கடந்த 23-ம் தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்தபோது, போலீஸுக்கும் அவர்களுக்கும் இடையே பயங்கரத் தள்ளுமுள்ளு. 'செந்தமிழன் சீமானை விடுதலை செய்!' என்று கொந்தளித்தபடி அவர்கள் ஓடி வர... கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் திண்டாடிய போலீஸார், ஒருவழியாக மாஜிஸ்திரேட் சாந்தினி முன்பு சீமானை நிறுத்தினர். நீதிபதியும், 'வரும் 6-ம் தேதி வரை சீமான் காவலை நீட்டிக்க' உத்தரவிட்டார்!&lt;/p&gt;
&lt;p&gt;சீமான் வந்த வேனில் இருந்து நீதிமன்ற வாசல் வரை காக்கிகள் கரம்கோத்து&lt;/p&gt;
&lt;p&gt;சங்கிலி அமைத்து, இரண்டே நிமிடங்களில் ஆஜர் முடிந்து... மீண்டும் வேனுக்கு சர்வஜாக்கிரதையாக அழைத்துச் சென்றனர். கோர்ட் படிகளில் இறங்கும் போது கிடைத்த சில நொடிகளில் சீமானிடம் நாம் பேசிய போது, ''காங்கிரஸுடன் பேரம் நடத்தவே, என்னை இந்த அரசு கைது செய்துள்ளது...'' என்று மட்டும் சீறலாகச் சொன்னார் சீமான்.&lt;/p&gt;
&lt;p&gt;அங்கு திரண்டு நின்ற இயக்கத்தினர் சிலர் நம்மிடம், ''இரு இனத்துக்கு இடையே மோதல் உருவாக்கும் வகையில் பேசியதற்காகத்தான் இந்தக் கைது என்று கூறுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை சிங்களவன், ஓர் இனமே அல்ல. மற்ற இனத்தின் மீது பரிவு கொள்வதுதான் இன்னோர் இனத்துக்கு அழகு. ஆனால், சிங்களன் அப்படியா? அங்கே தமிழனுக்கு அநீதி நடப்பதைக் கண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? நியாயமான உணர்ச்சி வேகத்தில்தான் எங்கள் தலைவர் பேசினார். அதற்காக, ஏதோ தேசவிரோத குற்றவாளிபோல கைதுசெய்து சிறையில் போட்டு, அவரின் கைதை வைத்து காங்கிரஸுடன் பேரம் நடத்துகிறது இந்த அரசு!&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சேலத்தில் தங்கபாலுவும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தோற்க முக்கியக் காரணம், எங்கள் தலைவர் சீமான்தான். ஈழ விவகாரத்தில் காங்கிரஸின் இரட்டை வேடத்தைத் துணிச்சலுடன் மேடைகளில் தோலுரித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் 'நாம் தமிழர்' சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி, காங்கிரஸைத் தமிழகத்தில் காலியாக்கத் திட்டம் வைத்திருந்தோம். இதைத் தெரிந்துகொண்டுதான் கலைஞர், ஓராண்டு வெளிவராதபடி எங்கள் தலைவரைக்&lt;/p&gt;
&lt;p&gt;கைது செய்துள்ளார். மேலும், 'தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை என்றால் சீமானை விட்டுவிடுவேன். அது உங்களுக்கு அதிக பாதகமாக அமையும்' என்று தங்கபாலு மூலம் காங்கிரஸ் மேலிடத்துக்குக் கூறியுள்ளார். நீதி எங்கள் பக்கம்... அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம். விரைவில் தலைவர் வெளிவந்து, மீண்டும் மேடை ஏறியே தீருவார், பாருங்கள்..!'' என்றனர், கொந்தளிப்பாக.&lt;/p&gt;
&lt;p&gt;சீமானின் வழக்கறிஞர் தடா சந்திரசேகரனிடம் பேசினோம். ''சிறையில் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யக்கூட அனுமதி இல்லை. தனி அறையில் அடைத்துள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரை அடைத்தது தவறு. இதை வலியுறுத்தி, இரண்டொரு நாளில் அட்வைசரி கமிட்டியில் முறையிடுவோம். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்!'' என்றார்.&lt;/p&gt;jkljk_408527248.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டல்,சுற்றுலா கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47641.html</link>
							
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:51:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் பல்வேறு வகையான சுற்றுலாக்களையும், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் விடுதிகளையும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல புதிய சுற்றுலாத்திட்டங்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இது நாள் வரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அகவை முதிந்தவர்களுக்கும், போரில் உயிரிழந்தோரின் விதவைகளுக்கும் சுற்று லாக்களிலும் விடுதி கட்டணத்திலும் 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனித்துறை ஒன்றினை உருவாக்கி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு (திருப்பதி சுற்றுலா மற்றும் ரயில்-சாலை சுற்று லாக்களை தவிர்த்து) அனைத்து சுற்றுலாக்கள் மற்றும் விடுதிகளில் தங்கும் கட்டணத்திலும் 25 சதவீதம் சலுகையினை வழங்குவது என்று முடிவு எடுத்துள்ளது.&lt;/p&gt;s r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>2-ந்தேதி லாரி ”ஸ்டிரைக்”கின்போது வேன், டேங்கர்களும் ஓடாது தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு அறிவிப்பு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47640--.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/cghx_549302285.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:49:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தென் மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் மத்திய அரசை சுங்க வரி வசூலிப்பதில் உள்ள முறைகேடுகளை சீரமைக்கவும் மற்றும் இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 02.08.2010 அன்று காலை முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டி ஆகிய மாநிலங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கலந்துக் கொள்வது என்று முடிவு எடுத்துள்ளோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மத்திய அரசு 05.08.2010 அன்றுக்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், 06.08.2010 அன்று அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த வேலை நிறுத்தத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி, டேங்கர், டிப்பர், வேன் அனைத்து வாகனங்களும் 02.08.2010 அன்று காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவது என்று தரை வழி போக்குவரத்து கூட்டமைப்பும் முடிவு எடுத்துள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தென் மாநில மற்றும் அகில இந்திய வேலை நிறுத்தம், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் தீர்வு ஏற்பட்டு வோபஸ் பெறப்பட்டாலும், சென்னை துறைமுக கண்டெய்னர் ஏற்றும் லாரி, ட்ரெய்லர் ஆகிய வாகனங்களின் துறைமுக வேலை நிறுத்தம் தொடரும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தென் மாநில, அகில இந்திய காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் சம்மந்தமாக நமது தென் மாநில வாகன உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தென் இந்திய மோட்டார் அசோசியேஷன் தலைவர் கோபால் நாயுடு, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையிலும் மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி முன்னிலையில் மற்றும் தரை வழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் வரவேற்புடன் நாளை (30-ந்தேதி) காலை 10 மணியளவில் சென்னை ராயபுரத்தில் நடைபெறும்.&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;cghx_549302285.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகளில் கட்டணம் ரத்து மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47639.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/tid_682990593.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:47:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் சுதர்சனம் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மதுவிலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதியின் அறிவிப்புக்கு பா.ம.க. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ஜெயராமன் பேசியதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மதுவிலக்கு கொள்கையில் விரைவில் நல்ல தகவல் வரும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார். பா.ம.க. சார்பில் அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்.முதல்வர் கருணாநிதி விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ்):- துப்புரவு பணியாளர்களுக்கு தரமற்ற மழைக்கோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தரமானதாக வழங்க வேண்டும். ஓய்வு பெறுபவர்களின் பணி, பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். ஓட்டேரி பிரிக்கேன் சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயர் சூட்ட வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மேயர் மா. சுப்பிரமணியன்:- கடந்த 3? ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,200 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றும் பலன் பெறாமல் இருந்த 2,156 பேருக்கு ரூ.56 கோடி வழங்கி செட்டில் செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;உறுப்பினர் கேட்டுக் கொண்டபடி பிரிக்ளின் சாலைக்கு இரட்டைமலை சீனிவாசன் பெயர் வைப்பது பற்றி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஜெயகலா பிரபாகர் (காங்கிரஸ்):- சொத்து வரி மறைமுகமாக உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதே?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மேயர் மா. சுப்பிரமணியன்:- சொத்து வரி உயர்வு எதுவும் கிடையாது. வரி விதிக்கப்பட்ட கட்டிடங்களில் உபயோகத்தன்மை மாற்றம் மற்றும் கூடுதல் கட்டுமானம் போன்றவற்றால் வரிமாற்றம் செய்யப்படும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;துல்கருணை (காங்கிரஸ்):- ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியும், நினைவிடத்தில் அணையா விளக்கு ஏற்றியும் பெருமை சேர்த்த முதல்-அமைச்சருக்கு நன்றி. அதேபோல் ராஜீவ் காந்தியின் உடல் சென்னை பொது மருத்துவமனையில் தான் வைக்கப்பட்டிருந்தது. எனவே பொது மருத் துவமனைக்கு ராஜீவ்காந்தியின் பெயரை சூட்ட வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சைதை ரவி (எதிர்கட்சித்தலைவர்):- சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்து வரி வசூலிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில பகுதிகள் மிகவும் முன்னேறி விட்டன. அந்த பகுதிகளில் குறைந்த கட்ட ணமே வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக ராஜீவ்காந்தி சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் இதுபோன்ற பகுதிகளுக்கு கட்டண மதிப்பு சீராய்வு செய்யப்பட வேண்டும். போலி டாக்டர்களை ஒழிக்க மருத்துவமனைகள், கிளீனிக் பற்றி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அரசை வலியுறுத்தி விரைவில் தடை செய்ய வேண்டும். &lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ராமலிங்கம் (ஆளுங்கட் சித்தலைவர்):- சென்னையில் குப்பைகளை அகற்றவும் அழகுபடுத்தவும் மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். கவுன்சிலர்களுக்கு லேப்- டாப், மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகளில் கட்டணம் ரத்து ஆகியவை பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவ்வாறு விவாதம் நடந்தது. அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மாநகராட்சி நலவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டண முறை ரத்து செய்யப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ரூ.19 கோடியே 79 லட்சம் செலவில் குப்பைகளை அகற்றுவதற்காக 93 நவீன காம்பாக்டர் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ரூ.1 கோடி செலவில் ஆலந்தூர் சாலையில் நவீன குப்பை மாற்று நிலையம் கட்டப்படும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நுங்கம்பாக்கத்தில் புதிய தொடக்கப்பள்ளி தொடங்க அனுமதிப்பது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சென்னையில் 6 லட்சத்து 27 ஆயிரம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். வருடம் ரூ.365 கோடி வசூலாகிறது. குறித்த காலத்தில் வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். செலுத்த தவறியவர்கசளுக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.&lt;/p&gt;tid_682990593.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>டெல்லிக்கு புறப்பட்ட சென்னை விமானத்தில் கோளாறு: என்ஜினில் புகை வந்ததால் 2 1/2 மணி நேரம் தாமதம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47638.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/fdhgd_630304760.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:44:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;சென்னையில் இருந்து டெல்லிக்கு ஜெட்லைட் தனியார் விமானம் இன்று காலை 6.25 மணிக்கு புறப்பட தயாரானது. ஓடுபாதையில் இருந்து கிளம்ப தயாரான போது விமானத்தின் என்ஜினில் இருந்து லேசாக புகை வந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதை கவனித்த பைலட் விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தி விட்டார். பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;உடனே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு கோளாறை சரி செய்தனர். அதன் பிறகு 2 1/2மணி நேரம் தாமதமாக 8.55 மணிக்கு மீண்டும் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது&lt;/p&gt;fdhgd_630304760.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>திருச்செங்கோட்டில் காமராஜர் சிலை தங்கபாலு அறிக்கை</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47637.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/eflwek_506923002.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:42:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;திருச்செங்கோடு நகரில் காமராஜர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா நடத்துவது பற்றி அப்பகுதியின் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.எம்.காளியண்ணனுடன் கலந்து ஆலோசித்து மிக விரைவில் சிலை திறப்பதற்கான முடிவு செய்யப்படும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவ்வாறு சிலை திறக்கும் விழாநடைபெறுகின்ற தேதி இறுதி செய்யப்பட்டவுடன் அந்த தேதி காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவிக்கப்படும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;திருச்செங்கோட்டில் நடைபெறும் அவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் இன்னாள்-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்ற வகையில் மிக சிறப்பாக சிலை திறப்பு விழா நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இச்சிலை திறப்பு விழா வுடன் காங்கிரஸ் பேரியகத்தின் 125-வது ஆண்டு விழாவும் இணைந்து கொண்டாடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;eflwek_506923002.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>என்ஜினீயரிங் கலந்தாய்வில் தரகர்களாக செயல்படும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களை திசை திருப்புகிறார்கள்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47636.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/jds_995351018.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:40:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பி விட்டன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தனியார் பொறியியல் கல்லூரிகளை மாணவ- மாணவிகள் தேர்வு செய்து வருகிறார்கள். 450-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருக்கின்றன.&lt;br /&gt;சிறந்த கட்டமைப்பு வசதி, தகுதியான ஆசிரியர்கள் உள்ள கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து வருகிறார்கள். கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள், பெற்றோர்களிடம் சில தனியார் கல்லூரி பேராசிரியர்கள் தவறான தகவல்களை கொடுத்து மாணவர்களை சேர்ப்பதாக புகார் வருகிறது. மாணவருக்கு உதவுவது போல அருகில் சென்று குறிப்பிட்ட கல்லூரியை சிறந்த கல்லூரி எனக்கூறி தவறுதலாக வழி நடத்தி அந்த கல்லூரியில் சேர்த்து விடுகின்றனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அப்படி சேர்ந்த ஒரு மாணவர் அந்த கல்லூரிக்கு பணம் கட்ட சென்றால் அக்கல்லூரியில் கட்டிட வசதி, கட்டமைப்பு வசதி இல்லையென தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஓடி வந்து முறையிட்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;டிப்-டாப் ஆசாமி ஒருவர்தான் அந்த கல்லூரியை சிறந்த கல்லூரி என்றும் அதை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக அந்த பெற்றோர் கூறினர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தனியார் கல்லூரி ஆசிரி யர்கள் இது போன்ற தரகர் வேளையில் ஈடுபடுவதற்கு ஒரு சீட்டிற்கு ரூ. 10 ஆயிரம் என பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதுகுறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் ரேமண்ட் உத்தரியராஜ் கூறுகையில், கலந்தாய்விற்கு வரும் பெற்றோர்கள் மற்றவர்கள் ஆலோசனையை கேட்க வேண்டாம். அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், அதிகாரிகளை மட்டும் அணுகவும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சிறந்த கல்லூரி இடம் போன்ற தகவல்களை பிறரிடம் கேட்டு ஏமாற வேண்டாம். அறிமுகம் இல்லாதவர் சொல்வதை நம்ப வேண்டாம். பெற்றோர்கள், மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் தரகர்களை ஒழிக்க முடியும். சந்தேகம் உள்ள பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்களை அணுகவும் என்றார்.&lt;/p&gt;jds_995351018.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>செப்டம்பர் மாதம் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47635.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hgdf_292141481.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:39:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் 1983-ம் ஆண்டு போடப்பட்டது. இதன்படி ஆந்திர அரசு சென்னைக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையும் மொத்தம் 7.016 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளது. ஒப்பந்தப்படி ஜீலை மாதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆனால் தாமதம் ஏற்பட்டது. எனவே தமிழக அதிகாரிகள் ஆந்திரா சென்று, கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வற்புறுத்தினார்கள். ஆகஸ்டு மாதத்திலாவது திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதற்கு ஆந்திர அதிகாரிகள், &amp;ldquo;கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே செப்டம்பரில் தண்ணீர் திறக்கப்படும்&amp;rdquo; என்று தெரிவித்தனர். தற்போது கண்டலேறு அணையில் 18.35 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது. எனவே கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும் கிருஷ்ணா தண்ணீர் திறப்பு தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இன்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியில் 1077 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. புழல் ஏரியில் 1367 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 1666 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 140 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள் ளது. வீராணம் ஏரியில் 343 மில்லியன் கன அடி இருக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சென்னைக்கு தற்போது தினமும் 660 மில்லியன் லிட்டர் குடிநீர் &amp;ldquo;சப்ளை&amp;rdquo; செய்யப்படுகிறது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;/p&gt;hgdf_292141481.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>அ.தி.மு.க. பிரமுகர்கள் மரணம் ஜெயலலிதா இரங்கல்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47634.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/fjg_879140935.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:38:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கோவை புறநகர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ராஜாமணி என்ற கே.பி.நடராஜ், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம், கோடியக்கரை கிளை கழக செயலாளரும், ஊராட்சி வார்டு உறுப்பினருமான கணேசன் ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும், தேனி மாவட்டம், உத்தமபாளையம், ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி தங்கராஜ் சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் ஆற்றொணாத் துயரம் அடைந்தேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அன்பு சகோதரர்கள் ராஜாமணி, கணேசன் மற்றும் தங்கராஜ் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரண மடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.&lt;/p&gt;fjg_879140935.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு; மு.க.ஸ்டாலின் வழங்கினார்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47633--.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hj_882317183.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:37:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின மாணவ -மாணவிகளை ஊக்கு விக்கும் வகையில் பரிசுகளை வழங்கி பாராட்டுச் சான்றிதழ்களை அளித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இத் திட்டத்தின்படி 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெறுகின்ற பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர் ஒரு வருக்கும், மாணவி ஒருவருக்கும் ஆக 6 முதல் பரிசுகள், 6 இரண்டாம் பரிசுகள், 6 மூன்றாம் பரிசுகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;2010 ஆம் ஆண்டில் 12 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த 57 மாணவ-மாணவிகளுக்கு ரூ.12 லட்சத்து 35 ஆயிரம் பரிசுத் தொகையினை இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் ராமநாதன், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பஷீர் அகமது, மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் அண்ணாமலை மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று 2010ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் மாநில அளவில் தலா முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு இன்று துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசின் சார்பில் பாராட்டுப்பத்திரமும், பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரத்தையும் வழங்கி மாணவ, மாணவி களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;2010-ம் ஆண்டு நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (கல்லணை) பயின்ற மாணவி எஸ். ஜாஸ்மின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழகத்திலேயே முதல் இடம் பெற்றுள்ளார். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவி ஒருவர் மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதே நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் (கல்லணை) பயின்ற ஸ்ரீதேவி லட்சுமி என்ற மாணவி மாநகராட்சி பள்ளிகளிலேயே இரண்டாவது இடம் பெற்றுள்ளார். மாணவிகள் ஜாஸ்மின், ஸ்ரீதேவி லட்சுமி ஆகியோரை துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நிகழ்ச்சியின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துணை முதன்மை செயலாளர் அசோக் வர்தன்ஷெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.&lt;/p&gt;hj_882317183.jpgs r</description>
							
						
					</item>
				
			
		
<description>விபரம் - செய்திகளின் தொகுப்பு</description>
</channel>
</rss>