<rss version="2.0" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
	<generator>Vivvo CMS 4.1</generator>
	<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
	<link>http://www.viparam.com/</link>
	<copyright>&amp;copy;2007 Spoonlabsd.o.o.</copyright>
	<image>
		<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
		<url>http://www.viparam.com/files.php?file=</url>
		<link>http://www.viparam.com/</link>
	</image>
	
			
				
					<item>
						
							<title>நான் மகான் அல்ல</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/48658.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/joh_945589254.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Mon, 30 Aug 2010 23:48:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;டாக்சி ஓட்டும் ஜெயப்பிரகாஷ் மகன் கார்த்தி. தாய், தங்கை என சந்தோஷமான குடும்பம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தோழி திருமணத்துக்கு சென்றவர் காஜல் அகர்வாலை பார்த்து காதல் வயப்படுகிறார். தொடர் சந்திப்புகளால் காஜலும் விரும்புகிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இன்னொரு புறம் ஜெயப்பிரகாஷ் டாக்சியில் காதல் ஜோடி வீட்டுக்கு தெரியாமல் ஓடுகிறது. அவர்கள் நான்கு மாணவர்களிடம் அடைக்கலம் கேட்கின்றனர். மாணவர்கள் அப்பெண்ணை கெடுப்பதுடன் கொடூரமாக கொன்று பிணத்தை வெட்டி சகதிக்குள் வீசுகின்றனர். தங்களை காட்டி கொடுத்து விடுவார் என பயந்து ஜெயப்பிரகாஷையும் தீர்த்து கட்டுகின்றனர். தந்தையை கொன்றவர்களை தேடி பிடித்து கார்த்தி பழி தீர்ப்பது கிளைமாக்ஸ்...&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;குடும்ப சென்டிமெண்ட், காதல் என பாதி கலகலப்பிலும் பிற்பகுதியில் கொலைகள் சேசிங் என திகிலிலும் காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் சுசீந்திரன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;திருமணத்தில் காஜலை சந்திக்கும் கார்த்தி நான் ஒரு லவ் பெயிலுவர் என சொல்லி அனுதாபம் பெற்று அவரை வசியப்படுத்தும் சீன்கள் கல கல... காஜல் வீட்டுக்கே சென்று பெண் கேட்பது கோபமாகும் தந்தை தாதாவை ஏவ அவனிடமும் பழைய காதலியை நினைவூட்டி நட்பாக்கி கொள்வது ரகளை...&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இளம்பெண் உடலை போலீஸ் மீட்டதும் சீன்கள் விறு விறுப்பாகின்றன. நண்பனின் காதலியை கொல்லும் நான்கு இளம் மாணவர்களின் சைக்கோத்தனமும்... ஜெயப்பிரகாஷை திட்டம் போட்டு அவர்கள் கொல்வதும் சீட் நூனிக்கு இழுக்கிறது. கொலையாளிகளை துப்பு துலக்கி கார்த்தி கண்டுபிடிப்பது நேர்த்தி. கிளைமாக்சில் அந்த இளைஞர்கள் கார்த்திக்கு உதவ வரும் ஊரே நடுங்கும் தாதாவையும் அவனது கூட்டாளிகளையும் கொடூரமாக கொல்வது ரத்தத்தை உறைய வைக்கிறது. அவர்களோடு கார்த்தி மோதும்போது என்ன ஆவாரோ என்ற நடுக்கம் தொற்றிக் கொள்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கார்த்திக்கு மைல்கல் படம் காதல், நடிப்பிலும் ஆக்ஷனில் சிக்சர் அடித்துள்ளார். காஜல் அகர்வால் அழுகான காதலி. போதைக்கு அடிமையாகி கொடூரமாக மாறும் அந்த நான்கு மாணவர்களும் வில்லத்தனத்தில் பெரிய வில்லன்களுக்கு சவால் விடுகின்றனர். சூரி, வைரவன், லட்சுமி, ராமகிருஷ்ணன் ஆகியோரும் உள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்கள் தாளம். மதியின் ஒளிப்பதிவு பிரமாண்டம்.&lt;/p&gt;joh_945589254.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>இனிது இனிது</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/48470.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/cvhd_454954271.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Thu, 26 Aug 2010 02:05:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை...&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்கின்றனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மாணவிகள் மது, பெனாஸ் போன்றோரும் ராக்கிங்குக்கு ஆளாகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல நட்பாகிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மது மேல் சித்தார்த்துக்கு காதல் மலர்கிறது சீனியர் மாணவரும் அவளை விரும்புகிறான். ஒரு கட்டத்தில் சித்தார்த் மதுவிடம் முத்தம் கேட்க ஆவேசமாகிறாள். நட்பில் பிளவு விழுகிறது. பிரிந்து பேசிக் கொள்ளாமல் திரிகின்றனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;விமலும் பெனாசும் நெருக்கமாகிறார்கள். அவர்களுக்குள் இன்னொரு பெண் நுழைய பிரிகின்றனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;டைசனுக்கு சீனியர் மாணவி சோனியா மேல் காதல்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இன்னொரு நண்பன் ஷங்கர் மோசமான நடத்தையுள்ள பெண்ணை காதலித்து அவள் வேறு ஆண்களுடனும் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து உடைகிறான்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இப்படி வெவ்வேறு காதலின் சந்தோஷம் வலிகளை தொகுத்து உயிரோட்டமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் கே.வி.குகன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மாணவர்களின் ராக்கிங், ஊடல்கள், நட்பு, காதல் போன்றவை கல்லூரி வாழ்வுக்கு மலரும் நினைவுகளாய் இழுத்து செல்கின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சித்தார்த் மது காதல் பூவாய் மனதை வருடுகிறது. சித்தார்த் மேல் வெறுப்பு காட்டும் மது அவன் தன்னை ஆழமாக காதலிப்பதை சக மாணவர்கள் ஆடியோவில் பதிவு செய்து காட்டியதன் மூலம் அறிந்து பார்க்க ஓடுவது அழுத்தம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மதுவின் தந்தை காரில் போய் ஒருவரை இடித்து சிக்கலில் மாட்டும் போது அவருக்கு சித்தார்த் உதவும் சீன்கள் நேர்த்தியானவை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அரசியல்வாதி மகனாக வரும் விமல் கலகலப் பூட்டுகிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;டைசன்-சீனியர் மாணவி சோனியா காதல் இன்னொரு ஒருதலை ராகம். சீனியர்கள் எதிர்ப்பை மீறி சோனியாவை சுற்றுவது கோழிகள் பிடிக்கும் என்றபதற்காக கல்லூரிக்குள் கோழி வளர்ப்பது அம்சம்.&lt;/p&gt;
&lt;p&gt;முழுக்க காதலுக்குள்ளேயே காட்சிகள் சுழல்வது லேசான சலிப்பு. மிக்கி ஜோ மேயர் இசையில் பாடல்கள் இனிமை.&lt;/p&gt;cvhd_454954271.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>மண்டபம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/48355.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/kgh_252618683.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Sun, 22 Aug 2010 22:55:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;வக்கீல் தொழில் பார்ப்பவர் தமிழரசன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி துணை நிற்கிறார். ஏழைகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து கசக்கி பிழிகிறது நிழல்கள் ரவி கும்பல். சட்டத்துக்கு புறம்பாக மணல் கடத்தலிலும் ஈடுபடுகிறார்கள். அவர் களை தட்டி கேட்கிறார் தமிழரசன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதனால் ஆத்திரமாகும் நிழல்கள் ரவி ரவுடிகளை ஏவி தமிழரசன் குடும்பத்தை அழிக்கிறார். கொலைப்பழியை தமிழரசன் மீது சுமத்தி ஜெயிலுக்கும் அனுப்புகிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் நிழல்கள் ரவியால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி தமிழரசனுக்கு உதவுகிறார். கோர்ட்டுக்கு சென்று வரும் வழியில் தப்பிக்க வைக்கிறார். நிழல்கள் ரவியையும், அவரது கூட்டாளிகளையும் தமிழரசன் பழி வாங்குவது கிளைமாக்ஸ்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தமிழரசன் நேர்மையான வக்கீல் கேரக்டரில் பளிச்சிடுகிறார். ஜெயிலில் இருந்து போலீஸ் அதிகாரியே அவரை அழைத்து வருவதும், எதிரியை தீர்த்துக்கட்டி விட்டு வா என்று அனுப்பி வைப்பதுமாக ஆரம்பமே எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கோர்ட்டில் தன் கதையை சொல்வது போல் பிளாஷ்பேக் விரிகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தமிழரசனுக்கும், வில்லன் நிழல்கள் ரவிக்கும் மோதல் ஏற்பட்டதும் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது. தாய், தந்தை, தங்கை என இடைச்செருகலாக வரும் குடும்ப செண்டிமென்ட் காட்சிகள் ஈர்க்கவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தமிழரசன் குடும்பத்தை கொடூரமாக அழிப்பது பயங்கரம். கிளைமாக்ஸ் சண்டை மிரட்டல். சினியா காதலியாக வந்து பரிதாபமாக உயிரை விடுகிறார். ரகசியா குத்தாட்டம் ஆடுகிறார். ஓ.ஏ.கே.சுந்தர், சண்முகசுந்தரம், வடிவுக்கரசி, கவுதமி போன்றோரும் உள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வக்கீல், ரவுடி மோதலை விறுவிறுப்பாக காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் ஆர்.செந்தமிழரசு. கதை யோட்டம், வசனத்தை இன்னும் கூர்தீட்டி இருக்கலாம்.&lt;/p&gt;kgh_252618683.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>காதல் சொல்ல வந்தேன்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/48354.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/ghcf_789964106.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Sun, 22 Aug 2010 22:54:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா மீது முதலாமாண்டு மாணவர் பாலாஜிக்கு காதல். மேக்னா தம்பியாக நினைத்து பழங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை வெளிப்படுத்தும் பாலாஜி அவர் இல்லாமல் வாழ முடியாது என்கிறார். மேக்னாவே காதலை ஏற்க மறுக்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவரை வசியப்படுத்த தற்கொலை நாடகம் ஆடுகிறார் பாலாஜி. காதல் நிறைவேறியதா? என்பது கிளைமாக்ஸ்...&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;காதல் கதையை கலகலப்பு விறுப்பு என காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன். புதுமுகம் பாலாஜி, கேரக்டரில் பொருந்துகிறார். மேக்னா சுந்தரை பார்த்த மாத்திரத்திலேயே ஓடோடி போய் பள்ளியில் தனது காதலை ஒதுக்கிய பெண்ணுக்கு போன் போட்டு நீ சம்மதிச்சிருந்தா இப்படி அழகான பெண் கிடைச்சிருக்காது. ஒத்துக் காததுக்கு நன்றி என்று சொல்லும் ஆரம்பமே அமர்க்களம்...&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மேக்னாவுடன் நட்பாக பழகி மனதில் இடம் பிடிப்பது அழகு... மேக்னாவை காதலிக்கும் சீக்கிய மாணவனுக்கு உதவுவது போல் நடித்து காதலியை வளைக்கும் சீன்கள் உச்சக்கட்ட காமெடி.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஊருக்கு புறப்படும் மேக்னாவிடம் காதலை வெளிப்படுத்த முயற்சிக்கையில் தன்னை அக்கா என்று அழைக்ககுமாறு அவர் சொல்வது திருப்பம்....&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;காதல் தோல்வியில் சோகமாவதில் மனதில் இறங்குகிறார். கிளைமாக்ஸ் இதயங்களை உலுக்குகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மேக்னா சுந்தர் அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். பாலாஜியின் காதலை ஏற்க முடியாமலும் வெறுக்க முடியாமலும் தவிக்கையில் தேர்ந்த நடிப்பை பிழிகிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பாலாஜி நண்பனாக கனத்த உடலில் வரும் சபேஷ் கார்த்திக் சிரிக்க வைக்கிறார். அவ்வப்போது முறைத்து பார்க்கும் சீனியர் மாணவரிடம் நடுங்குவதும் ஒரு கட்டத்தில் அந்த மாணவன் பெண் குரலில் பேச பயம் போய் எதிர்ப்பதும் வயிறு வலிக்கும் காமெடி.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் மனதை வருடுகிறது. ராணாவின் ஒளிப்பதிவு கல்லூரி வாழ்வியலை கண்ணுக்குள் பதிக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பொருந்தாத காதலை கையில் எடுத்த இயக்குனர் அதில் ஜீவன் வைக்க முயன்று வென்றுள்ளார். கதை கல்லூரிக்குள்ளேயே சுற்றுவதை தவிர்த்து இருக்கலாம்.&lt;/p&gt;ghcf_789964106.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>வம்சம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/48278.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/vamsam_283742882.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Thu, 19 Aug 2010 08:34:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;பசங்க எனும் ஒரே படத்தில் நம்பிக்கை இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜிடமிருந்து வந்திருக்கும் அடுத்த படைப்பு வம்சம்.&lt;/p&gt;
&lt;p&gt;கிராமம்,  திருவிழா, உள்பகை, பகை கிராமத்துப் பெண் மீது காதல், அந்தக் காதலுக்காக  மோதல் என்று கால காலமாக பார்த்துப் பழகிய கதைதான் என்றாலும், அதை  நகைச்சுவையுயும் இனிய காதலுமாக கலந்து சொன்ன விதத்தில் மனசை ஈர்க்கிறார்  பாண்டி.&lt;/p&gt;
&lt;p&gt;புலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு தேவர் சமூக கிராமங்கள்.  இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா ஏகப் பிரசித்தம். இந்த திருவிழாவில்  நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும்  ஜெயித்து தள்ளுபவர் லோக்கல் தாதா கிஷோர் (அருள்நிதியின் அப்பா). அவரிடம்  தொடர்ந்து தோற்கும் அவமானத்தில் கடுப்பான ஊர்ப் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ்,  சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிஷோரைக் கொன்று விடுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்  பிறகு மகனுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கும்  கிஷோரின் விதவை மனைவி, மகனை கணவனின் தாதாயிச நிழல் படாமல் நல்ல பிள்ளையாக  வளர்க்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் தந்தை செய்தததின் &amp;lsquo;பலனை&amp;rsquo; அனுபவித்தே தீர வேண்டிய  கட்டாயம் ஏற்படுகிறது அருள் நிதிக்கு. இந்த நேரம் பார்த்து அவருக்கும்  பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவின் அப்பாவை ஒரு  விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷுடன்  நடுரோட்டில் மோதுகிறார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள் நிதி.  இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார்  ஜெயித்தார்கள்? என்பது சற்றே எளிதில் யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ்.&lt;/p&gt;
&lt;p&gt;கதை  பழசுதான் என்றாலும், அதற்கு பாண்டிராஜ் போட்டிருக்கும் பாலீஷ், அட சொல்ல  வைக்கிறது. திருவிழாக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் அத்தனை  நேர்த்தி. எப்போது கிராமத்துக்குப் போவோம் என்ற ஏக்கத்தையே  உண்டாக்கிவிடுகின்றன அந்தக் காட்சிகள்.&lt;/p&gt;
&lt;p&gt;அருள் நிதிக்கு இது முதல்  படம். வெகு சுலபமாக தேறிவிடுகிறார். சண்டைக் காட்சிகளில் இப்போதே ஆக்ஷன்  கிங் அளவுக்கு பறந்து பறந்து பந்தாடுகிறார். கொஞ்சம் அடக்கி வாசித்தால்  தேவலாம். மற்றபடி வசன உச்சரிப்பிலும், உடல்மொழியிலும் இன்னும் கொஞ்சம்  கவனம் தேவை. ம்ம்&amp;hellip; அதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள்&amp;hellip; ஏதோ ஒரு  சூரியன் என்ற அடைமொழியுடன் அருள்நிதியை பெரிய ரவுண்ட் வரவைத்து  விடமாட்டார்களா தமிழ் சினிமாக்காரர்கள்!&lt;/p&gt;
&lt;p&gt;கிராமத்து மின்னலாக  கலக்கியிருக்கிறார் சுனேனா. நடிக்க வாய்ப்புள்ள பாத்திரமென்றால் வெளுத்து  வாங்க இதோ இன்னொரு நாயகி தயார். பசுமாட்டுக்கு அசின் என்று பெயர் வைத்து  காதல் வளர்க்கும் காட்சி குபீர் (பூனைக்கு த்ரிஷா என்று பெயர்  வைத்திருக்கிறார்கள்!).&lt;/p&gt;
&lt;p&gt;கேரக்டர் வில்லனாக இருந்தாலும் படத்தின்  இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு அசத்தியிருப்பவர் ஜெயப்பிரகாஷ்.  அலட்டல், ஆர்ப்ப்பாட்டம் இல்லாமல் கண்ணசைவிலேயே பயங்கரத்தைக் காட்டுகிறார்  மனிதர்.&lt;/p&gt;
&lt;p&gt;மனதில் நிற்கிற இன்னொரு பாத்திரம் அருள் நிதியின் அம்மாவாக  நடித்திருக்கும் புதுமுகம் நந்தினி. அலட்டிக் கொள்ளாத பாந்தமான நடிப்பு.  ரவுடி ரத்தினமாக சில காட்சிகளில் வந்தாலும் அந்த பாத்திரத்துக்கு உயிர்  தருகிறார் கிஷோர்.&lt;/p&gt;
&lt;p&gt;கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் சிரிப்புக்கு 100 சதவிகித உத்தரவாதம்.&lt;/p&gt;
&lt;p&gt;பசங்க  படத்தில் செல்போனை வைத்து கவிதையாய் காட்சிகளை வடித்த பாண்டி, இந்தப்  படத்தில் அதே செல்போன்களை வைத்து அட்டகாசமான எள்ளல் காட்சி ஒன்றை  அமைத்திருக்கிறார். இந்த வித்தியாசம்தான், வழக்கமான கதையென்றாலும்  வம்சத்துக்கு ஆதரவைக் கூட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;கோயில் காட்சிகளை விலாவாரியாகக்  காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் சலிப்புத் தட்டுவதையும்  இயக்குநர் கவனித்திருக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;சண்டைக் காட்சிகளை இன்னும் சற்று இயல்பாக வைத்திருக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;மகேஷ்  முத்துசாமியின் ஒளிப்பதிவு, புதுக்கோட்டை கிராமங்களை அப்படியே கண்முன்  நிறுத்துகிறது. எது செட், எது நிஜம் என்று இனம் பிரிக்க முடியாத தேவராஜனின்  கலை இயக்கத்தைப் பாராட்டியே தீர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;தாஜ் நூரின் இசை பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக பின்னணி இசை பெரிய மைனஸ்.&lt;/p&gt;
&lt;p&gt;உப்பு  கொஞ்சம் கம்மி, காரம் கொஞ்சம் தூக்கல் என குறைகள் இருந்தாலும், தலைவாழை  இலையில் கிராமத்து விருந்து பரிமாறப்பட்ட விதமே நிறைத்துவிடுகிறது மனதை!&lt;/p&gt;
&lt;p&gt;வம்சம்&amp;hellip; சுவாரஸ்யமான கிராமத்து அத்தியாயம்!&lt;/p&gt;vamsam_283742882.jpgS S</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>தம்பி அர்ஜூனா</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/48143.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/awere_468223973.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Wed, 11 Aug 2010 22:33:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;ஊரே நடுங்கும் தாதா பெரோஸ்கான். அவரது தம்பி ரமணா, கல்லூரி மாணவர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பெரோஸ்கானை போலீஸ் அதிகாரி சுமன் பயன்படுத்தி வேண்டாதவர்களை பழி தீர்க்கிறார். சுமன் மகள் ஆஷிமாவும் ரமணாவும் காதல் வயப்படுகின்றனர். இருவருக்கும் திருமணம் முடிக்க பெரோஸ்கான் பெண் கேட்டு செல்கிறார். அவரை சுமன் அடித்து அவமானப்படுத்துகிறார். ஆவேசமாகும் ரமணா பதிலுக்கு சுமனை அடிக்கிறார். பிறகு காதலை உதறி விட்டு வெளிநாட்டுக்கு படிக்கப் போகிறார். பெரோஸ்கானும் பொதுமன்னிப்பு வாங்கி திருந்தி வாழ்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சில வருடங்களுக்கு பிறகு ரமணாவை தீர்த்துக்கட்ட சுமன் காய் நகர்த்துகிறார். பெரோஸ்கானை மனைவி குழந்தையுடன் கடத்தி சிறை வைக்கின்றனர். ரமணா அவசரமாக நாடு திரும்புகிறார். அவரை என் கவுண்டரில் கொல்ல போலீஸ் சுற்றி வளைக்கிறது. தப்பினாரா? என்பது கிளைமாக்ஸ்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதிரடி ஆக்ஷனிலும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பிலும் படத்தோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் விஜய் ஆர். ஆனந்த். சகோதர பாசத்திலும் காதலிலும் அழுத்தம் பதிக்கிறார். ரமணா தனது அறைக்கு ஆஷிமாவை வர வைத்து காதல் வசியப்படுத்தும் சீன்கள் கிளு கிளு... அண்ணனை போலீஸ் அதிகாரி தாக்கியதும் பதிலடி கொடுப்பது ஆவேசம். கிளைமாக்சில் காட்டு பங்களாவில் இருந்து ஆஷிமாவை மீட்டு வருவது ஹாலிவுட் மிரட்டல்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பெரோஸ்கான் தாதா கெட்டப்பில் கம்பீரம். எதிரிகளை நொறுக்குவதில் அனல். போலீஸ் குடும்பத்து பெண் வேண்டாம் என்று தம்பியிடம் கெஞ்சுவதும் பிறகு மனம் மாறி பெண் கேட்க போய் செருப்பு அடி வாங்கி அவமானப்படுவதும் பாசத்தின் முத்திரை. என் கவுண்டர் போலீசை சுட்டப்படி மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டு ஓடுவது பரபர... காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஆஷிமா கச்சிதம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சுமன், &amp;ldquo;நான் கடவுள்&amp;rdquo; ராஜேந்திரன் வில்லனாக வருகிறார்கள். அருண்பாண்டியன், பாலாசிங் ஆகியோரும் உள்ளனர். போலீஸ் அதிகாரியை, ரமணா சக போலீஸ் அதிகாரிகள் முன்னால் செருப்பால் அடிப்பதிலும், பதிலுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போக விடுவதிலும் லாஜிக் இல்லை. தினா இசையில் பாடல்கள் இனிமை. மாதவராஜ் தத்தா ஒளிப்பதிவு பலம்.&lt;/p&gt;awere_468223973.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பாணா காத்தாடி</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/48142.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/afdeg_203334569.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Wed, 11 Aug 2010 22:32:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;குப்பத்தில் இருந்து பிளஸ்-2 படிக்கும் ஏழை மாணவன் அதர்வா. பட்டம் விடுவதில் கில்லாடி. அவருக்கும் பேஷன் டெக்னாலஜி படிக்கும் கோடீஸ்வர பெண் சமந்தாவுக்கும் மோதல் வருகிறது. பிறகு ஒருவரையொருவர் புரிந்து நட்பாகிறார்கள். சமந்தா மேல் அதர்வா காதல் வயப்படுகிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;குப்பத்து ரவுடி பிரசன்னா விடம் அதர்வாவும் அவர் நண்பர்களும் பிரியம் காட்டுகிறார்கள். பிரசன்னா செய்யும் ஒரு கொலையை அதர்வா பார்க்க நேரிடுகிறது. அவரை சாட்சியாக்கி பிரசன்னா கூட்டத்தை பிடிக்க போலீஸ் முயற்சிக்கிறது. எனவே அதர் வாவை தீர்த்து கட்டும் படி பிரசன்னாவிடம் வற்புறுத்துகிறார் தாதா ராஜேந்திரன், பிரசன்னாவுக்கோ கொல்ல மனம் வரவில்லை. இதனால் இன்னொரு கொலையாளியை ஏவுகிறார். சமந்தாவும் அதர்வாவும் காதலை பறிமாறிக்கொள்ளும் போது கொலையாளி அங்கு வருகிறான். அதன் பிறகு நடப்பது இதயத்தை உலுக்கும் கிளைமாக்ஸ்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஏழை பணக்கார காதலை யதார்த்தங்களுடன் அழுத்தமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். காத்தாடி விடும் குப்பத்து இளைஞர்களின் சந்தோஷங்களில் குதூகலம். குப்பத்து மாணவன் கேரக்டரில் அச்சு அசலாக பொருந்துகிறார் அதர்வா. இவர் நடிகர் முரளியின் மகன். சமந்தாவிடம் காதலை வெளிப்படுத்தும் போது போலீஸ் பிடியில் சிக்குவது எதிர்பாராத திருப்பம். விடுதலையானதும் பழித்து பேசும் ஊரார் மத்தியில் மகனை விட்டுக் கொடுக்காத தாயின் அன்பை நினைத்து அழும் போது நெஞ்சை கனக்க வைத்து தேர்ந்த நடிகராக பளிச்சிடுகிறார். தவறை உணர்ந்து தன்னிடம் வரும் காதலியை தொடர்ச்சியாய் உதாசீனம் செய்வது ஒட்ட வில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சமந்தா அழகும் நடிப்பும் கலந்த கலவையாய் கவர்கிறார். தந்தை-மகனாக வரும் டி.பி.கஜேந்திரன், கருணாஸ் கூட்டணியின் காமெடி வயிற்றை புண்ணாக்குகிறது. தினமும் டி.பி.கஜேந்திரன் பாக்கெட்டில் வைக்கும் பணத்தை நடுராத்திரியில் கருணாஸ் திருட முயன்று தோற்பது ரகளை. பஸ் கண்டக்டராக வரும் மனோ பாலாவும் சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ரவுடியாக வித்தியாச பரிமாணம் காட்டுகிறார் பிரசன்னா. தன்னை உயர்வாக மதிக்கும் அதர்வாவை தலைவன் கட்டளைப்படி கொல்ல முடியாமல் தவிப் பதில் அழுத்தம் பதிக்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அன்பும் வாயாடித்தன மும் நிறைந்த அம்மாவாக வரும் மவுனிகா நேர்த்தி. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ் மிரட்டல் வில்லன். யுவன்ஷங்கர் ராஜா இசையில் தாக்குதே கண் தாக்குதே பாடல் முணு முணுக்க வைக்கிறது. கிளைமாக்சை இன்னும் வித்தியாசமாக யோசித்து இருந்தால் கத்தாடி உயர பறந்து இருக்கும்.&lt;/p&gt;afdeg_203334569.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பொள்ளாச்சி மாப்ளே</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/47515.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/ity_967186450.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Mon, 26 Jul 2010 20:05:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;பொள்ளாச்சி சந்தையில் தில்லு முல்லு செய்து அன்றாட வாழ்வைநகர்த்து பவர்கள் சத்யராஜ், கவுண்ட மணி. அதே சந்தையில் வியாபாரிகளிடம் பிக்பாக் கெட் அடிக்கிறார் சூசன்.&lt;/p&gt;
&lt;p&gt;வாரிசு இல்லாத பெரும் பண்ணையார் விணுசக்கரவர்த்திக்கு சத்யராஜை வளர்ப்பு மகனாக்கி சொத்துக்களை அடிக்க வியூகம் வகுக்கிறார் ஜோதிடர் டி.பி.கஜேந்திரன், சத்யராஜ் வளர்ப்பு மகனானதும் அவருக்கு சூசனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பண்ணை வீட்டுக்கு வரும் சூசன் சொத்துக்களை சத்யராஜ், டி.பி.கஜேந்திரன் கோஷ்டியிடம் இருந்து பாதுகாக்கிறார். இதனால் அவரை தீர்த்து கட்ட&amp;nbsp; வெளியூரில் இருந்து ஒரு கொலைகாரனை வர வைக்கின்றனர் சூசன் தப்பினாரா, சொத்துக்கள் யார் வசம் போனது என்பது கிளைமாக்ஸ்...&lt;/p&gt;
&lt;p&gt;காமெடியில் முழு கதையையும் கோர்த்து சிரிப்பில் வயிற்றை பதம் பார்க்கிறார் இயக்குனர் ஆர்.லட்சுமணன். சந்தையில் கழிவு தக்காளி, வாழைப் பழங்களை ஏமாற்றி கூடுதல் ஏலத்துக்கு விற்பவர்களாக அறிமுகமாகும் சத்யராஜும், கவுண்டமணியும் நக்கல் நையாண்டியில் தோரணம் கட்டுகின்றனர். இவர்களுடன் டி.பி.கஜேந்திரன் சேர்ந்ததும் சிரிப்பலையில் அரங்கே குலுங்குகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பண்ணையார் கொடுக்கும் கட்டு கட்டான பணத்தை டி.பி.கஜேந்திரன் பிடுங்கி இருவருக்கும் `பேட்டா' என்று ஓரிரு நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுப்பது... வீட்டு சாவி சூசன் கைக்கு போனதும் அவரை கொல்ல துணிவது என சிரிப்பாகவே சீன்கள் நகர்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;கிளைமாக்சில் வழிகளில் நீர்கோர்க்க வைக்கிறார் சத்யராஜ். வழக்கமான பாணியில் கவுண்டமணி கலகலக்க வைக்கிறார். டி.பி.கஜேந்திரன் படம் முழுக்க வில்லத்தனமான காமெடியில் தூள் கிளப்புகிறார். இனி முழு நேர நடிகராகலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;கில்லர் மஞ்சுவாக சூசனை கொல்ல வரும் கொலைகாரன் வேடத்தில் மணிவண்ணன் இன்னொரு காமெடி வெடியை கொளுத்தி போடுகிறார். சூசனை பத்ரகாளி வேடத்தில் பார்த்து மூர்ச்சையாகி விழுவது காமெடி உச்சம். பிக்பாக்கெட் திருடியாக மாமனாருக்கு அடங்கிய மருமகளாக வரும் சூசன் அழுத்தம் பதிக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;போலீஸ் அகதிகாரியாக வரும் அனுமோகன், பாசத்துக்காக ஏங்கும் விணுசக்கரவர்த்தி, சொத்தை அபகரிக்க மிரட்டும் அலெக்ஸ் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;சீரியஸ் சீன்களையும் காமெடித்தனமாகவே நகர்த்துவது கதையை வலுவிழக்க செய்கிறது. திருட்டுத்தொழில் செய்த சூசன் மனமாற்றத்திலும் தெளிவு இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;தேவா இசையில் பாடல்கள், தாளம் போட வைக்கின்றன. காமெடி தர்பார்.&lt;/p&gt;ity_967186450.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>விருந்தாளி</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/47350.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/asdf_463042448.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Wed, 21 Jul 2010 21:20:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;வட்டிக்கு பணம் கொடுப்பவர் ஈஸ்வர். அதே ஊரில் தபால் காரராக இருக்கும் பாலாசிங் மகள் தியானாவுக்கும், ஈஸ்வருக்கும் மோதல் ஏற்பட்டு காதலாக மலர்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதே கிராமத்துக்கு போலீஸ் அதிகாரியாக வரும் சேரன் ராஜூம், தியானாவை விரும்புகிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஈஸ்வர் நண்பன் புவன்கோடீஸ்வர பெண்னொருத்தியை காதலிக்கிறார். அப்பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க உறவினர்கள் சதி செய்கின்றனர். எனவே காதலை எதிர்க்கிறார்கள். ஈஸ்வரோ காதல் ஜோடிக்கு பக்கபலமாக நின்று திருமணத்தை முடிக்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதனால் ஏற்படும் மோதலில் புவன் கொல்லப்படுகிறார். அதை நேரில் பார்க்கும் தியானாவையும் கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அவர் தப்பினாரா என்பது கிளைமாக்ஸ்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வட்டித்தொழில் செய்பவராக வரும் ஈஸ்வர் வெகுளித்தனம் காதல், ஆவேசம் என வேறுபட்ட பரிமாணங்களில் ஸ்கோர் பண்ணுகிறார். தியானா கையால் வட்டி கடை திறப்பது அவருடன் எடுத்த போட்டோவை வீட்டில் மாட்டி ரசிப்பது... தனது பெயரில் கடிதம் எழுதி போட்டு தியானாவை வீட்டில் கொண்டு தரவைப்பது போன்றவை காதல் முத்திரைகள். தியானா யதார்த்த நடிப்பில் வசிகரிக்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சேரன்ராஜ் மிரட்டல் வில்லன். ஈஸ்வர் தந்தையாக வரும் நாசர், பாலாசிங், பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கவித்துவமான காதல், எதிர்பாராத திருப்பங்களுடன், காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார் இயக்குனர் வாட்டர் மேன். ஆரம்ப காட்சிகள் இழுவையாக நீள் வதை குறைத்து இருக்கலாம். கொலை வழக்கில் தண்டனை பெறும் நாசரின் பிளாஸ்பேக்கில் வலு இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;எஸ்.எஸ்.குமரன் இசையில் பாடல்கள் இனிமை.&lt;/p&gt;asdf_463042448.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>அந்தரங்கம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/47288.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hg_273815802.jpg" />
										
								
							<category>திரை விமர்சனம்</category>
							<pubDate>Tue, 20 Jul 2010 21:59:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;சிவப்பு விளக்கு பகுதி ஏஜெண்டாக இருக்கும் ரமேஷ், அப்பாவியான மோகனாவை காதலிப்பது போல் நடித்து வலையில் விழவைக்கிறான். திருமணம் செய்வதாக ஏமாற்றி விபசார விடுதி நடத்தும் சரசாவிடம் விற்கிறான். அங்கிருந்து தப்பிக்க போராடுகிறாள். &amp;ldquo;எய்ட்ஸ்&amp;rdquo; இருப்பதாக சொல்லி கற்பை காப்பாற்றுகிறாள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பிறகு போலீஸ் உதவியோடு தப்புகிறாள். பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை தொடராக எழுதுகிறாள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அப்போது பணத்துக்கு பெண்களுடன் செல்லும் மதனுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். நட்பாக பழகுகிறார்கள். மதனை போலீஸ் தேடுகிறது. அவனை பிடித்து கொடுக்க மோகனாவும் முயற்சிக்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னுடன் தங்கி இருப்பவன் தான் போலீஸ் தேடும் ஆண் விபசாரி என்பது தெரிய அதிர்கிறாள். அவனை போலீசில் பிடித்து கொடுத்தாளா என்பது கிளைமாக்ஸ்...&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;விபசாரத்தில் தள்ளப்படும் அபலை பெண்களின் வாழ்வை உருக்கமாகவும் கிறக்கமாகவும் காட்சிபடுத்தி உள்ளார் இயக்குனர் ஜே.வி. ருக்மாங்கதன். மோகனாவாக வரும் கமாலிகா விலை மாதர் விடுதியில் விற்கப்பட்டதும் என்ன ஆவாரோ என எதிர்பார்ப்பு எகிறுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஓவியன் பல லட்சங்கள் கொடுத்து மோகனாவை விலைக்கு வாங்கி போய் திருமணம் செய்ய விரும்புவதும் அதை நம்பி ஆடை இல்லாமல் அவன் வரையும் ஓவியத்துக்கு போஸ் கொடுப்பதும் அதை மறைவாக ஆள் வைத்து வீடியோவில் பதிவு செய்து மோகனாவை மிரட்டுவதும் எதிர்பாராத திருப்பங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆண் விபசாரி மதனாக வரும் டான் கட்டுமஸ்தான உடல் வாகில் கவர்கிறார். பணக்கார பெண்களுடன் படுக்கையை பகிரும் சீன்கள் சூடேற்றும் ரகம். கமாலிகா, டான் இருவரையும் ஒரே வீட்டில் தங்க வைத்து வெவ்வேறு கோணத்தில் காட்சிகளை நகர்த்துவது கச்சிதம். சரசாவாக வரும் சிந்து, ரமேஷாக வரும் சஞ்சை வில்லத்தனம் செய்கின்றனர். முதல் சந்திப்பிலேயே ரமேஷின் காதலை கமாலிகா ஏற்பது நம்பும்படி இல்லை. கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். கவர்ச்சி பிரியர்களுக்கு விருந்து.&lt;/p&gt;hg_273815802.jpgs r</description>
							
						
					</item>
				
			
		
<description>விபரம் - செய்திகளின் தொகுப்பு</description>
</channel>
</rss>