<rss version="2.0" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
	<generator>Vivvo CMS 4.1</generator>
	<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
	<link>http://www.viparam.com/</link>
	<copyright>&amp;copy;2007 Spoonlabsd.o.o.</copyright>
	<image>
		<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
		<url>http://www.viparam.com/files.php?file=</url>
		<link>http://www.viparam.com/</link>
	</image>
	
			
				
					<item>
						
							<title>சர்வதேச இயற்பியல் போட்டி: இந்திய மாணவிக்கு தங்க பதக்கம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/47619.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/fdgdf_974011495.jpg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 17:04:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;&amp;ldquo;இயற்பியல் ஒலிம்பிக்&amp;rdquo; என்ற சர்வதேச இயற்பியல் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இயற்பியல் தொடர்பான பல்வேறு புதிர்களுக்கு தீர்வு கண்டு பிடிப்பதே போட்டியின் முக்கிய அம்சமாகும். இதில் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்கலாம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த அண்டு இயற்பியல் ஒலிம்பிக் போட்டி குரோசியா நாட்டில் நடந்தது. 82 நாடுகளைச் சேர்ந்த 376 பேர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதில் பங்கேற்ற மும்பை மாணவி அகான்ஷா சர்தா தங்க பதக்கம் பெற்று உள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இயற்பியல் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் பெறுவது இதுவே முதல் முறை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த போட்டியில் இந்தியாவுக்கு 3 வெண்கலம் பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் ஆகியவையும் கிடைத்தன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அசான்ஷா இந்த ஆண்டு தான் பிளஸ்-2 முடித்தார். ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் அவர் இந்தியாவில் 18-வது இடத்தை பிடித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆனாலும் அவர் ஐ.ஐ.டி. கல்லூரியில் சேரவில்லை. அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் சேர போவதாக அறிவித்து உள்ளார்.&lt;/p&gt;fdgdf_974011495.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>மருந்து தயாரிக்க பயன்படும் ஆக்டோபஸ் விஷம் விஞ்ஞானிகள் தகவல்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/47603.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/agb_414787353.jpg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 12:13:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;மெல்போர்ன் பல்கலைக் கழகம், நார்வேயன் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அண்டார் டிகா கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அங்கு வாழும் 4 புதிய ரக ஆக்டோபஸ்களை கண்டு பிடித்தனர். அவை விஷத்தன்மை வாய்ந்தவையாகும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவற்றில் இருந்து விஷத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். இதன் மூலம் அவற்றில் இருந்து மருந்து தயாரிக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இவை தவிர கட்டில்பிஷ், ஸ்குயிட் போன்ற மீன்களின் விஷத்தில் இருந்தும் மருந்து தயாரிக்கலாம். ஏனெனில் இவை 0 டிகிரி வெப்பநிலை உள்ள ஆழ்கடலில் வாழ்பவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;agb_414787353.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/47598.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hjuk_221325838.jpg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 12:06:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை &amp;ldquo;நடமாடும் நோய்க்கூடம்&amp;rdquo; என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன்மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்களும் தாக்குகின்றன.&lt;/p&gt;hjuk_221325838.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>விண்வெளியில் பூமியை போன்று 140 கிரகங்கள்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/47484-140.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hjkh_968034520.jpg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Mon, 26 Jul 2010 19:00:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத் திரங்கள் குறித்து அமெரிக் காவின் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் மறைந்து கிடக்கும் 706 புதிய கிரகங்களையும், 5 புதிய சூரிய மண்டலத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மேலும், தொடர்ந்து ஊடுருவி ஆராய்ச்சி செய்து பார்த்தபோது பூமியை போன்று 140 புதிய கிரகங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இங்கு பூமியை போன்று பாறைகள் நிலம் மற்றும் தண்ணீர் உள்ளன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எனவே, இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடந்த 6 வாரத்தில் கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் இந்த அதிசயங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதைத் தொடர்ந்து, பூமியை போன்று உள்ள கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியம் உள்ளதா? என கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற் கொள்ளப்பட உள்ளது என பேராசிரியரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான டிமிதர் சசெல்லோவ் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;hjkh_968034520.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/47384.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/gjf_778161182.jpg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Thu, 22 Jul 2010 19:43:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (வயது 34).&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் இருந்தன. அதாவது ஏஞ்சலுக்கு 2 கர்ப்பபை இருந்துள்ளது. இரண்டிலும் கர்ப்பமாகி உள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த கர்ப்பம் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு நேரத்தில் அவர் கர்ப்பமாகி உள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பெண்களுக்கு 50 லட்சம் பேரில் ஒருவருக்கு இதே போல கர்ப்பபை இருக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 100 பெண்களுக்கு இதேபோல இரட்டை கர்ப்பங்கள் ஏற்பட்டு உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் வளர்வதாலும், வெவ்வேறு நேரத்தில் கர்ப்பமாகி இருப்பதாலும் குழந்தை வளரும்போது இதில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே என்ன செய்யலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;gjf_778161182.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>வெப்ப சலனம் என்றால் என்ன?</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/47342.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/kjj_136058149.jpg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Wed, 21 Jul 2010 20:58:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் என்றால் என்ன என்பதற்கு வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:- அதிகமாக வெயில் அடிக்கும் போது கடல் காற்று உள்ளே வந்தால் காற்றில் ஈரப்பதம் சேர்ந்து ஆங்காங்கே மேக கூட்டம் உருவாகும். இதைத் தான் வெப்ப சலனம் என்கிறோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த மேககூட்டங்கள் எல்லா இடத்திலும் இருக்காது. அதனால் தான் எழும்பூரில் மழை பெய்தால் சென்ட்ரலில் மழை இருக்காது. கோடை சமயங்களில் வெப்ப சலனம் அதிகம் ஏற்படும் ஆனால் கடந்த 2 நாட்களாக வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக விட்டதால் பரவலாக மழை பெய்து வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவ்வாறு ரமணன் கூறினார்.&lt;/p&gt;kjj_136058149.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>நீண்ட கால புதிருக்கு விடை: கோழியில் இருந்துதான் முட்டை வந்தது விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/47130.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/dyt_588416456.jpeg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Thu, 15 Jul 2010 18:51:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்பது இதுவரை யாரும் பதில் அளிக்க முடியாத கேள்வியாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்து உள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர் உறுதி செய்துள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும் அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.&lt;/p&gt;dyt_588416456.jpegs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>5 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாய்ந்தது: விஞ்ஞானிகள் சோதனை வெற்றி</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/46972.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/fgjf_254520402.jpeg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Mon, 12 Jul 2010 16:53:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வுக்காகவும், இந்தி யாவின் இயற்கை வளங்களை கண்டறியவும், கட்டமைப்பு பணிகளுக்காகவும் அடுத்தடுத்து செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் கார்டோ சாட் 2பி என்ற செயற்கை கோளை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த செயற்கை கோள் அனுப்பப்படும் போது தங்கள் நாட்டு செயற்கை கோள்களையும் சேர்த்து அனுப்புமாறு அல்ஜீரியா, கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டன. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த செயற்கை கோள் ஒன்றும் தயாராக இருந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதையடுத்து 5 செயற்கை கோள்களையும் ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். கடந்த 2 மாதமாக இதற்கான இறுதிகட்ட பணிகள் மும் முரமாக நடந்து வந்தன. சென்னையில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ராக்கெட் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி. (போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிக்கிள்) சி-15 என்றழைக் கப்பட்ட அந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரத்தில் 4 நிலைகளுடன் மிக பிரமாண்டமாக இருந்தது. அதற்குள் 5 செயற்கை கோள்களும் வைக்கப்பட்ட பிறகு, நேற்று முன்தினம் 51 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இன்று காலை &amp;ldquo;இஸ்ரோ&amp;rdquo; விஞ்ஞானிகள் அனைவரும் பி.எஸ்.எல்.வி.-சி-15 ராக்கெட் ஏவும் பணியில் ஈடு பட்டனர். திட்டமிடப்படி மிகச் சரியாக 9.22 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி-15 ராக் கெட் தீ புகையை கக்கிய படி புறப்பட்டது. சில வினாடிகளுக்குள் அந்த ராக்கெட் திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக பறந்தது. திரையில் அதை கண்காணித்தப்படி இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கை தட்டினார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சுமார் 4 நிமிடத்துக்குள் பி.எஸ்.எல்.வி.-சி-15 ராக்கெட் 200 கிலோ மீட்டர்தூரத்தை விண்ணில் எட்டியது. 375 வினாடிகளில் ராக்கெட் 750 கிலோ மீட்டர் தொலைவை கடந்து வெற்றிகரமாக சென்றது. விஞ்ஞானிகள் ஏற்கனவே திட்ட மிட்டிருந்தபடி பி.எஸ்.எல்.வி.-சி-15 ராக்கெட்டில் இருந்து ஒவ்வொரு பகுதியாக பிரிந்தன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதையடுத்து 5 செயற்கை கோள்களையும் அவற் றுக்குரிய சுற்றுப் பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பிரித்து விட்டது. இந்த பணிகளும் ஏற்கனவே திட்ட மிட்டிருந்தது போல குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்து முடிந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி.-சி-15 ராக்கெட் புகையை கக்கிய படி மிக, மிக அழகாக சென்ற சில நிமிடங்களுக்குள் 5 செயற்கை கோள்களும் தங்கள் சுற்றுப் பாதையில் சென்று சுழலத் தொடங்கின. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து ஒருவருக்கொருவர் கை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி.-சி-15 ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததை திட்டக்கமிஷன் தலைவர் மாண்டேக் அலு வாலியா, முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் நேரில் வந்து பார்த்தனர். அவர்களுக்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார். மற்ற விஞ்ஞானிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்து பேசினார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி.-சி-15 ராக்கெட் திட்ட இயக்குனர் குன்னி கிருஷ்ணன் நன்றி தெரிவித்து பேசினார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தயாரான கிரையோஜெனிக் என்ஜின் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் இன்றைய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சாதனை முக்கியமானதாககருதப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இன்று ஏவப்பட்ட 5 செயற்கை கோள்களில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் தயாரிப்பான கார்டோ சாட்-2 பி செயற்கை கோள் மிக முக்கியமானதாகும். 694 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் இந்தியாவின் 17-வது தொலையுணர்வு செயற்கை கோளாகும். இது இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;முக்கிய நகரங்களில் புறவழி சாலை அமைக்க, வனப்பகுதிகளில் புதியபாதை ஏற்படுத்த இந்த சாடிலைட் கொடுக்கும் தகவல்கள் மிகவும்பயன் உள்ளதாக இருக்கும். நகர்புற திட்டமிடலில் கார்டோ சாட் மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த செயற்கை கோள் தற்போது வெற்றிகரமாக தன் சுற்றுப்பாதையில் இயங்கி வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கார்டோ சாட் செயற்கை கோளுடன் ஏவப்பட்ட அல்ஜீரியாவின் அல்சாட் செயற்கைகோள் 116 கிலோ எடை கொண்டது. சுவிட்சர்லாந்து, கனடா நாடுகளின் நானோ செயற்கை கோள்கள் மிக, மிக எடை குறைந்தவை. கனடாவின் செயற்கை கோள் 6 1/2 கிலோவும், சுவிட்சர்லாந்தின் நானோ செயற்கை கோள் 1 கிலோவும் எடை கொண்டதாகும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆந்திரா, கர்நாடகா என் ஜினீயரிங் மாணவர்கள் தயாரித்திருந்த ஸ்டுடட் செயற்கை கோளும் ஒரு கிலோ எடை கொண்டது தான். எல்லா எடைகளையும் சேர்த்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மொத்தம் 230 டன் எடையுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;5 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் மீண்டும் விண்ணில் செலுத்தியதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் உலகின் கவனத்தை பலமாக ஈர்த்துள்ளது. ரூ.260 கோடி செலவில் நடந்துள்ள இந்த சாதனை யைத் தொடர்ந்து அடுத்த 3 மாதங்களுக்குள் மேலும் 2 முக்கிய செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு வருவதாக அதன் தலைவர் விஞ்ஞானி கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரி வித்தார்.&lt;/p&gt;fgjf_254520402.jpegs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 5 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி15 ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/46886----.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/aer_985733842.jpeg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Sat, 10 Jul 2010 21:53:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 5 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி. 15 ராக்கெட் வருகிற 12-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி-சி 15 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை கடந்த மே மாதம் 9-ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் 2-வது தளத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அந்த கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் வருகிற 12-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் வெளிதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த ராக்கெட் 5 செயற்கை கோள்களை தாங்கி செல்கிறது. இந்தியாவின் கார்போ சாட்2 பி, அல்ஜிரீயாவின் அல்சாட், கனடா மற்றும் சுவிட்சர்லாந்தின் தலா ஒரு நானோ செயற்கை கோள்கள் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக என்ஜினீயரிங் கல்லூரிகளின் 7 மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பிகோ என்ற சிறிய ரக செயற்கை கோளும் இவற்றில் அடங்கும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவற்றை விண்ணில் செலுத்துவதற்கான 51 மணி நேர கவுண்ட்டவுன் (ஆயத்தப்பணி) நாளை (10-ந்தேதி) காலை 6 மணிக்கு தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த தகவலை இஸ்ரோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சதீஷ் தெரிவித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. டி 3 ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் அது தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து தற்போது தான் மீண்டும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ஏவப்பட உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இது 694 கிலோ எடையுள்ள கார்போசாட்-2 பி மற்றும் 4 துணை செயற்கை கோள்களை சுமந்தபடி 630 கி.மீட்டர் தூரம் சூரிய வட்ட பாதையில் பயணம் செய்ய உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்தியா சார்பில் அனுப்பப்பட உள்ள கார்போசாட்- 2 பி செயற்கைகோள் நகர்ப்புற திட்டம் மற்றும் சுற்றுச் சாலைகள் அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் சீரமைப்பு போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும் சக்தி வாய்ந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது விண்ணில் இருந்து பூமியை படம் பிடித்து அனுப்பும்.&lt;/p&gt;aer_985733842.jpegs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>உலகில் முதன் முறையாக வாலிபருக்குமுழு முகமாற்று ஆபரேசன்; பிரான்ஸ் டாக்டர் சாதனை</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.%E0%AE%A8%E0%AF%81/46855.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hjghg_742562021.jpeg" />
										
								
							<category>விஞ் / தொ.நு</category>
							<pubDate>Fri, 09 Jul 2010 12:42:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;விபத்தில் சிக்கி முகம் சிதைந்த நிலையில் உள்ள வர்களுக்கு முகமாற்று ஆபரேசன் செய்யப்பட்டு வருகிறது. முகத்தில் சிதைந்த பாகங்கள் மட்டும் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் மறு சீரமைக்கப்படுகிறது. ஆனால், முகம் முழுவதையும் மாற்றும் வகையில் முழு முகமாற்று ஆபரேசனை பிரான்சை சேர்ந்த டாக்டர் லாரண்ட்லான் டியரி செய்து சாதனை படைத்துள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மரபணு கோலா நினால் முகத்தில் பாதிப்பு ஏற்பட்ட 35 வயது வாலிபர் ஒருவர் டாக்டர் லாரண்ட் லான்டியரிடம் சிகிச்சைக்காக வந்தார். முகம் முழுவதும் அகோரமாக இருந்த அவரை டாக்டர் லாரண்ட் குழுவினர் பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள எளுன்ரி மாண்போர் ஆஸ்பத்திரியில் வைத்து முகமாற்று ஆபரேசன் செய்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதற்கு முன்பு நாயினால் கடித்து குதறப்பட்ட ஒரு பெண்ணின் மூக்கு, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளை இக்குழுவினர் முகமாற்று ஆபரேசன் செய்துள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆனால் தற்போது கண் இமை, கண்ணீர் நாளம் போன்றவற்றிலும் ஆபரேசன் நடத்தப்பட்டது. இதற்கு முன்பு யாரும் இது போன்ற ஆபரேசன் செய்தது இல்லை. இது தான் உலகிலேயே முதன் முதலாக நடத்தப்பட்ட முழு முக ஆபரேசன் ஆகும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சுமார் 12 மணி நேரம் ஆனது. இது டாக்டர் லாரண்ட்லாண்டி நடத்தப்பட்ட 12-வது முகமாற்று அறுவை சிகிச்சை ஆகும்.&lt;/p&gt;hjghg_742562021.jpegs r</description>
							
						
					</item>
				
			
		
<description>விபரம் - செய்திகளின் தொகுப்பு</description>
</channel>
</rss>