<rss version="2.0" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
	<generator>Vivvo CMS 4.1</generator>
	<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
	<link>http://www.viparam.com/</link>
	<copyright>&amp;copy;2007 Spoonlabsd.o.o.</copyright>
	<image>
		<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
		<url>http://www.viparam.com/files.php?file=</url>
		<link>http://www.viparam.com/</link>
	</image>
	
			
				
					<item>
						
							<title>விவாகரத்து வழக்கு செல்வராகவன்-சோனியாஅகர்வால் கோர்ட்டில் ஆஜர்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/43257--.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/selva_144355887.jpg" />
										
								
							<category>திரையுலகம்</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 15:40:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;விவகாரத்து வழக்கில் இயக்குனர் செல்வராகவன், அவரது மனைவி சோனியா அகர்வால் ஆகியோர் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;செல்வராகவன் இயக்கிய &amp;ldquo;காதல் கொண்டேன்&amp;rdquo; படத்தில் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரு வருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்நிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இருவரும் சம்மதித்து பிரிவதாக மனுவில் கூறியிருந்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த வழக்கு இன்று குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கில் வருகிற 12-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ராமலிங்கம் கூறினார்.&lt;/p&gt;selva_144355887.jpgsundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பதவிக்கு வர கடும்போட்டி: பொது தேர்தலை மிஞ்சிய இளைஞர் காங்கிரஸ் தேர்தல்; ஆர்வத்துடன் “கியூ”வில் நின்று வாக்களித்தனர்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43256.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/young_219742098.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 15:33:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொது தேர்தலை மிஞ்சும் வகையில் நடந்து வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்பு மட்டத்தில் நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சென்னையில் 155 வார்டுகளுக்கும் நிர்வாகியை தேர்வு செய்ய இன்று 3-வது நாளாக தேர்தல் நடந்தது. உறுப்பினர்கள் வாக்களிக்க 25 இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பொதுதேர்தல் போலவே தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெளி மாநிலங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;உறுப்பினர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். பெயர் விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு விரலில் அடையாள மை வைக்கப்படுகிறது. அதன்பிறகு ஓட்டுச்சீட்டு கொடுக்கப்படுகின்றது. இளைஞர் காங்கிரஸ் சின்னம் பொறித்த முத்திரை பதித்து உறுப்பினர்கள் ஓட்டளிக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வாக்குசாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று இளைஞர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பஞ்சாயத்து முதல் மாநில நிர்வாகிகள் வரை 1லட்சத்து 1000 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்போது நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுபவர்கள்தான் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இறுதியாக நடைபெறும் மாநில நிர்வாகிகள் தேர்தலில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளும், பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளும் வாக்களிப்பார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எனவே அடிமட்டத்தில் இருந்தே தங்கள் ஆதரவாளர்களை வெற்றி பெற செய்ய ஒவ்வொரு கோஷ்டியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மாநில நிர்வாகிகள் பதவிக்கு குறிவைத்துள்ள ஹசீனா சையத், வில்லிவாக்கம் சுரேஷ், ஈரோடு ராஜா, பாரத்நாச்சியப்பன், மகேந்திரன், ஜி.ஆர்.கதிரவன், கார்த்திக் ஆகியோர் மாநில அளவில் தங்கள் ஆதரவாளர்கள் வெற்றி பெற முயற்சித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கடுமையான விதிமுறைகளின்படி தேர்தல் நடத்தினாலும் கட்சி நிர்வாகிகள் களம் இறங்கி ஆதரவு திரட்டுவதால் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கில் ஒரு வாக்கு சாவடியில் கள்ளஓட்டு போடுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சென்னையில் முகாமிட்டுள்ள சச்சின்ராவ் உடனடியாக அந்த வாக்குச்சாவடிக்கு சென்றார். பின்னர் ஓட்டுப்பதிவு சுமூகமாக நடந்தது.&lt;/p&gt;young_219742098.jpgsundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>சாமியார் வீடியோ காட்சி: லெனின் பின்னணியில் சதிக் கும்பல்; போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வருமா?</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43255.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/seedan_595672069.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 15:30:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;திருவண்ணாமலை சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யானந்தாவின் நம்பிக் கைக்குரிய சீடராக இருந்த லெனின் என்ற தர்மானந்தா இந்த வீடியோ காட்சிகளை நான்தான் எடுத்தேன் என பகிரங்கமாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் லெனின் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்படும் என்று கூறிய கமிஷனர் ராஜேந்திரன், தமிழக போலீசாரும், மிரட்டல், மோசடி வழக்கை விசாரிப்பார்கள் என்று கூறினார். சாமியார் மீது புகார் கொடுத்த சீடர் லெனின் மோசடி பேர்வழியாக வலம் வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;காந்தப்படுக்கை மோசடியில் சிக்கிய லெனின் தனது பெயரை தர்மானந்தா என மாற்றிக்கொண்டு நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நித்யானந்தாவின் சீடரான பின்னர், லெனின், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவராக திகழ்ந்தார். இதனால் பெங்களூர் ஆசிரமத்தில் லெனினின் கை ஓங்கியிருந்தது. நித்யானந்தா எங்கு சென்றாலும், லெனினையும் தன்னுடன் அழைத்துச் செல்ல தொடங்கினார். இதனால் நித்யானந்தாவின் அத்தனை நடவடிக்கைகளும் லெனினுக்கு அத்துபடியானது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்நிலையில்தான் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்தை அடைவதற்கு ஒரு கும்பல் திட்டம் தீட்டியது. இதற்காக நித்யானந்தாவை சந்தித்து, இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பல கட்டங்களாக பேரம் பேசி உள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆனால் நித்யானந்தா எதற்கும் ஒத்துவரவில்லை. ஆசிரமத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளில் அவர் கவனம் செலுத்த தொடங்கினார். கட்டிட வேலைகளும் வேகமாக நடைபெற தொடங்கின.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதன் பிறகுதான் நித்யானந்தாவுக்கு எதிராக சதி திட்டம் அரங்கேறியுள்ளது. யாரை வைத்து சாமியாரை சிக்க வைக்கலாம் என சதிக்கும்பல் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், இவர்களின் வலையில் ஆசிரம நிர்வாகி ஒருவர் முதலில் சிக்கினார். இவரை வைத்துதான் லெனினை பிடித்துள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதற்காக லெனினுக்கும், ஆசிரம நிவாகிக்கும் கோடிக்கணக்கில் பணம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதன் பிறகுதான் சாமியாரின் படுக்கை அறை காட்சிகள் ரகசியமாக படம் எடுக்கப்பட்டு வெளி உலகுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சென்னை போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை நேற்று அனுப்பி வைத்துள்ளனர். இது கையில் கிடைத்ததும் பெங்களூர் போலீசார் விசாரணையை தொடங்குவார்கள். நித்யானந்தாவை படம் எடுத்ததாக லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதால் அவரிடம் முதலில் விசாரணை நடத்தப்படும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அப்போது லெனினிடம், எதற்காக நித்யானந்தாவை படம் எடுத்தீர்கள். இதற்கு மூல காரணம் என்ன? நீங்கள் எடுத்த வீடியோ, காட்சிகளை முதலில் போலீசுக்கு கொடுக்காமல் டி.வி. மற்றும் பத்திரிகைகளுக்கு கொடுத்தது ஏன் என்பது போன்ற கேள்விகளை கேட்க உள்ளனர். அப்போது லெனினின் பின்னணியில் செயல்படும் சதிக்கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் கொடுத்த லெனின் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் அவர் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய பிரமுகரின் பின்னணி குறித்து பெங்களூர் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;/p&gt;seedan_595672069.jpgsundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/43254.html</link>
							
										
								
							<category>இலங்கை</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 13:56:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;
&lt;p&gt;பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் போது 93 வாக்குகள் ஆதரவாகவும் 24 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளது. இதன் படி அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இன்றைய விவாதத்தின் போது இதற்கு ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்துள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;பெப்ரவரி 9ஆம்திகதி பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவசரகால சட்ட நீடிப்புக்காக விசேட விவாதம் ஒன்றை நடத்துவதற்காக மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக அறிவித்திருந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதே வேளை மேலக மக்கள் முண்ணணியின் மனோகணேசன் தனது தேர்தல் பிரச்சார வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் நடத்தியிருக்கிறார்.&lt;/p&gt;
&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/p&gt;Athiran 7</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பிரதமர் சமரசம்: முலாயம்சிங்- லல்லு ஏற்க மறுப்பு; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வற்புறுத்தல்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/43253--.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/lalji_119370537.jpg" />
										
								
							<category>இந்தியா</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 13:48:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளை பிரதமர் மன்மோகன்சிங் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதற்காக அவர் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதை ஏற்று 3 பேரும் இன்று காலை ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் வீட்டுக்கு சென்று மன்மோகன்சிங்கை சந்தித்தனர். 3 பேரிடமும் மன்மோகன் சிங் மசோதாவை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக 3 பேரும் தங்கள் கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இறுதியில் பிரதமர் வேண்டுகோளை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சந்திப்பு முடிந்து வெளியே வந்த லல்லு பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நாங்கள் பிரதமரிடம் இந்த மசோதாவை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டோம். இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்கும்படியும் கூறினோம். எங்கள் கருத்துக்களை அவர் கவனமுடன் கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இப்போதைய மசோதாவுக்கு எங்கள் எதிர்ப்பு தொடர்ந்து நீடிக்கும். நாங்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானவர்கள் அல்ல. ஆனால் தேவையான பெண்களுக்கு இந்த பதவி சென்றடைய வேண்டும். அது இப்போதைய மசோதாவில் இல்லாததால்தான் எதிர்க்கிறோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சரத்யாதவ் கூறும்போது, &amp;ldquo;எங்கள் கருத்துக்களை பிரதமரிடம் தெளிவாக கூறிவிட்டோம். முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர், தலித்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான எங்கள் வேதனைகளை அவரிடம் சொல்லி இருக்கிறோம். இந்திய மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் இவர்கள் உள்ளனர். பிரதமர் எங்களை அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்&amp;rdquo; என்றார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பிரதமர் உங்களிடம் ஏதாவது வாக்குறுதி கொடுத்தாரா? என்று கேட்டதற்கு 3 பேருமே பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.&lt;/p&gt;lalji_119370537.jpgsundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>அரசு பஸ்களில் செல்போன் பயன்படுத்திய 4 டிரைவர்கள் சஸ்பெண்டு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43252.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/celph_525881935.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 13:45:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;சாலை விபத்துக்களை தடுக்க அரசு அதிரடி உத்தரவு போட்டது. அதன்படி பள்ளி மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் பணியின்போது செல்போன் வைத்திருக்க தடை செய்யப்பட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்கிறார்களா என்பதை கண்காணிக்க மண்டல போக்குவரத்து நிர்வாகம் 50 பேர் கொண்ட குழுவை அமைத்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த குழுவினர் நடத்திய சோதனையில் பிடிபட்ட 17 டிரைவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகே இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலியானர்கள். இந்த விபத்துக்கு காரணம் டிரைவர் செல்போனை பயன்படுத்தியதே என்பது விசாரணையில் தெரியவந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதைதொடர்ந்து நேற்று வேலூர் மண்டல அரசு போக்குவரத்து மேலாளர் ஜெகதீசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வேலூர் புதிய, பழைய பஸ் நிலையம் காட்பாடி, பாகாயம் உட்பட பல இடங்களில் பஸ் டிரைவர்களிடம் சோதனை நடத்தினர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அப்போது 11 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் வைத்திருந்த 4 டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அரசு பஸ்களை இயக்கும்போது டிரைவர்கள் செல்போனில் பேசினால் அல்லது வைத்திருந்தாலோ 94454 56027 அல்லது 94454 56028 என்ற மொபைல் எண்களில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பொது மேலாளர் ஜெகதீசன் கூறினார்.&lt;/p&gt;celph_525881935.jpgsundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>ஷூட்டிங் பந்தயம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/43251.html</link>
							
										
								
							<category>திரையுலகம்</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 13:40:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;ஏவி.எம். ஸ்டுடியோ நட்சத்திர பட்டாளங்களால் நிரம்பி வழிந்து&amp;zwnj;க் கொண்டிருக்கிறது. காரணம் இரண்டு நாயகன்களின் படங்களும் அடுத்தடுத்த ஃப்ளோர்களில் படப்பிடிப்பு நடப்பதால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபுறம் தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை படம். மற்றொன்றில் விஜய் நடிக்கும் சுறா. இரண்டு படங்களும் மே மாதம் வர இருப்பதால் வேகமாக நடந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மாப்பிள்ளைப் படத்துக்காக பிரமாண்ட சண்டைக் காட்சிகளுக்காக, ஸ்டண்ட் நடிகர்களும், சுறாவுக்காக பாடல் காட்சி ஒன்றுக்காக நடன நடிகர்கள் என எங்கு பார்த்தாலும் ஜே..ஜே.. என்று கூட்டமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படம் வெளியாகி ஓடுவதில்தான் போட்டி வரும் என்றால் இங்கே யார் படத்தை சீக்கிரம் முடிப்பது என்று ஒரு மெளனமான போட்டியும் ஏற்பட்டிருக்கிறது.&lt;/p&gt;sundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>அதிரடியில் ஆண்டனி</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/43250.html</link>
							
										
								
							<category>திரையுலகம்</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 13:38:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;பலரும் நடிக்கக் கேட்டும் சம்மதிக்காத இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. 'நான்' என்ற படத்தில் இசையமைப்பதோடு அதிரடியாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் ஜீவாசங்கர் இயக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தில், ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்த சித்தார்த் நாயகனாகவும் நாயகியாக திரு திரு துறு துறு படத்தில் நடித்த ரூபாவும் நடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிரடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விஜய் ஆண்டனி நடிப்பில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. மிகவும் கூச்ச சுபாவம் உள்ள ஆண்டனி நடிக்கிறார் என்றதும் அவரின் நண்பர்களே ஃபோன் போட்டு கலாய்த்தார்களாம்.&lt;/p&gt;sundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>மற்றொரு விண் மீன்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/43249.html</link>
							
										
								
							<category>திரையுலகம்</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 13:36:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;விளம்பரங்களை இயக்கித் தரும் இயக்குனர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் ஜேடி - ஜெர்ரி பல்வேறு நாயகிகளை விளம்பரத் துறைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், வித்யா பாலன் என தொடர்ந்து த்ரிஷா, பூனம் பஜ்வா என இவர்களின் கண்டுபிடிப்புதான். அந்த வகையில் இன்னொரு நாயகியையும் தந்திருக்கிறார்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் டெல்லியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான தப்சி. ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் பெற்றதோடு, தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடிக்கவுள்ளார். இத்துடன் நடனம் கற்று, கிளாஸ் எடுக்கும் அளவுக்கு கைதேர்ந்தவராம்.&lt;/p&gt;sundar</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பாடும் பெண் குயில்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/43248.html</link>
							
										
								
							<category>திரையுலகம்</category>
							<pubDate>Tue, 09 Mar 2010 13:33:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆண்ட்ரியா காட்டிய கவர்ச்சியை யாராலும் மறக்க முடியாது. அப்படி நடித்தும் படங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. பல இயக்குனர்கள் வந்து கதை சொன்னாலும் அதில் தனக்கு கிளாமர் வேடமாகவே இருக்கிறது என்று மறுத்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்படியே போனால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் முத்தக்காட்சி, நீச்சல் உடையிலும் நடிக்கத் தயார் என்று அறிக்கை விட்டார். அறிக்கைவிட்ட அந்த வாரத்திலேயே இரண்டு படங்களுக்கு ஒப்பந்தமானார் ஆண்ட்ரியா.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு இந்துஸ்தானி இசையையும் கற்றுவரும் இவர் தீவிரமாக பின்னணி பாடவும் தயாராகி வருகிறார். இவருக்கான பாடலை இவரே பாடுவதும் நன்றாகத்தானே இருக்கும். அந்த அதிர்ஷ்ட்கார மைக் எந்தத் தியேட்டரில் உள்ளதோ...!&lt;/p&gt;sundar</description>
							
						
					</item>
				
			
		
<description>விபரம் - செய்திகளின் தொகுப்பு</description>
</channel>
</rss>