<rss version="2.0" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
	<generator>Vivvo CMS 4.1</generator>
	<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
	<link>http://www.viparam.com/</link>
	<copyright>&amp;copy;2007 Spoonlabsd.o.o.</copyright>
	<image>
		<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
		<url>http://www.viparam.com/files.php?file=</url>
		<link>http://www.viparam.com/</link>
	</image>
	
			
				
					<item>
						
							<title>செங்கல்பட்டில், நாளை 1000 மாணவர்களுக்கு கல்விக்கடன்: மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்குகிறார்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48728-1000.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/cx_640515477.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Wed, 01 Sep 2010 20:50:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&lt;br /&gt;பட்டதாரிகள், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு வங்கிகடன் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கே.ஆர்.சி. திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்து இருந்தவர்களுக்கும், தற்போது கல்விகடன் வேண்டுபவர்களுக்கும் ஒரே இடத்தில் கடன் வழங்கு வதற்கான ஏற்பாடுகளை காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. விஸ்வநாதன் செய்துள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;25 வங்கிகள் கடன் கொடுப்பதற்காக ஸ்டால்கள் அமைக்கின்றன. கல்விக் கடன் பெற விரும்பும் மாண வர்களுக்கு இந்த விழாவில் உடனே கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு கடன் வழங்குகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பல்லாவரம் ஆர்.எஸ்.செந்தில்குமார், தீனதயாளன், அருவிபாபு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கடந்த ஆண்டு காஞ்சீபுரத்தில் இதே போல் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இதில் 1900 மாணவ- மாணவிகள் பயன் அடைந்தனர். தற்போது 2-வது முறையாக செங்கல்பட்டில் நடத்தப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு பல்லாவரம் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் சார்பாக ஆலந்தூர், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம் பேட்டை, சிட்லபாக்கம், சாணட்டோரியம், தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ். செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;cx_640515477.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>தமிழக மேல்-சபை தேர்தல் தொகுதி வரையறை தெளிவாக இருக்கவேண்டும்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா கடிதம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48724--.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/dfg_737583456.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Wed, 01 Sep 2010 20:44:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தமிழ்நாட்டில் மேல்சபை அமைக்க பாராளுமன்றம் அனுமதி அளித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.&amp;nbsp; இது தொடர்பாக தொகுதி வரையறை செய்ய இந்திய தேர்தல் கமிஷன் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போன்ற விவரங்களை அனுப்பி இருந்தது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள் கூட்டம் தேர்தல் கமிஷனால் கடந்த 28-ந் தேதி நடத்தப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட விவரங்களில் முறையான தகவல்கள் இல்லை. எந்த அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்படுகிறது, உள்ளாட்சி நிர்வாகிகள், பட்டதாரிகள், ஆசிரியர், தொகுதிகள் போன்ற விவரங்கள் சரியாக இல்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்திய அரசியலமைப்பு சட்டம் 171-வது பிரிவின் படி தொகுதி வரையறைகள் இருக்க வேண்டும். அதன்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதாவது உள்ளாட்சி நிர்வாகிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இப்போதுள்ள நடைமுறைகள் இதற்கு மாறாக உள்ளன. தொகுதி வரையறை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள வரைவு திட்டங்கள் சரியானதாக இல்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எனவே மாவட்ட வாரியாக உள்ளாட்சி நிர்வாகிகள், பட்டதாரிகள் ஆசிரியர்கள் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தொகுதி வரையறை வெளிப்படையாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும். தொகுதி வரையறை தொடர்பான வரைவு திட்டங்களை அரசு கெஜட்டில் வெளியிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக இதில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் தொகுதி வரையறைகள் மக்கள் தொகை மற்றும் பூகோள ரீதியில் சமநிலையில் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இது தொடர்பாக வரைபடம் தயாரித்து பூகோளம் மற்றும் எல்லைகளை தெளிவு படுத்த வேண்டும். பின்னர் தொகுதி வரையறை வரைவு திட்டங்கள் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், அனைவருக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக அவர்கள் கருத்துக்களையும் அறிய வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இத்துடன் இந்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் முக்கிய இடங்களிலும் வைக்க வேண்டும். பொதுமக்கள் ஆட்சேபனைகள், கருத்துக்களை தெரிவிக்கவும் வசதி செய்ய வேண்டும். இதற்கு 2 மாதம் வரை அவகாசம் அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தேர்தல் கமிஷன் பொது மக்கள், அறிஞர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் கருத்துக்களையும் கேட்டு பெற வேண்டும். அதன் பிறகே தொகுதி வரையறையை இறுதி செய்ய வேண்டும். இது வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதற்காக தேர்தல் கமிஷன் அரசியல், கட்சிகள் கொண்ட குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். இதற்கு அரசியல் சார்பற்ற ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த குழுவினர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கூட்டம் நடத்தி பொதுமக்கள், அறிஞர்கள், கல்வி மையங்கள், அரசு சாரா நிறுவனங்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், கருத்துக்களை அறிய வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;குழு கொடுக்கும் அறிக்கையை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தொகுதி வரையறை விஷயத்தில் அவசரம் காட்டக் கூடாது, அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்கு ஒத்து இது அமைய வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எனவே உள்ளாட்சி நிர்வாகிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், விவரங்களை முறையாக கணக்கெடுத்த பிறகு தொகுதி வரையறை திட்டத்தை மறுபடி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் கூறி உள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கடித நகல்களை மத்திய தேர்தல் கமிஷனர் சம்பத், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.&lt;/p&gt;dfg_737583456.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>மேட்டூர் அணையில் இன்று 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு; கருணாநிதி உத்தரவு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48723.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hdf_102672848.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Wed, 01 Sep 2010 20:41:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&lt;br /&gt;தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-&lt;/p&gt;
&lt;p&gt;இன்றைய (1.9.2010) காலை பத்திரிகையில், குறுவை சாகுபடி பாதிக்கும், சம்பாவுக்கு வாய்ப்பில்லை, கடைமடைக்குத் தண்ணீர் இல்லை என்ற தலைப்பில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;உண்மை நிலை பின் வருமாறு:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;போதிய நீர் வரத்து இல்லாததால், வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28-ந்தேதி திறக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டும் இதே தேதியில்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;2009 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்டு 31 வரை கர்நாடகத்திலிருந்து 81 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப் பெற்றது. ஆனால் இந்த ஆண்டு இதே காலத்தில் 39 டி.எம்.சி. தண்ணீரே கிடைக்கப் பெற்றது. அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடும்போது பாதியை விடக் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கப் பெற்றுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதுகுறித்து முதல்- அமைச்சர் கருணாநிதி, கர்நாடக முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பிரதமருக்கும் இதுபற்றிக்கடிதம் எழுதி, மத்திய அரசு இதில் தலையிட்டு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகா உடனே தண்ணீரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆகஸ்டு மாதம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், மேட்டூரிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் அளவு 10,000 கன அடியில் ஆரம்பித்து பின்பு 8,000 கன அடியாகக் குறைத்து வழங்கப்பட்டு வந்தது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் ஆட்சித்தலை வர்களின் வேண்டுகோ ளின்படி இன்றிலிருந்து (1.9.2010) 12,000 கன அடி தண்ணீரை வழங்க முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தொடர்ந்து சம்பா சாகுபடி சிறப்பாக நடை பெறத்தேவையான அளவு தண்ணீரை வழங்க தமிழக அரசு எல்லா நட வடிக்கைகளையும் எடுத்து வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;hdf_102672848.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>நாடு முழுவதும் சித்தா ஆயுர்வேதா மருந்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: பாராளுமன்றத்தில் ஜெயதுரை எம்.பி. பேச்சு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48722.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hjgh_738391793.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Wed, 01 Sep 2010 20:37:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஜெயதுரை பாராளுமன்ற விவாதத்தின் போது பேசியதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சித்தா மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்து வருகிறது தமிழக அரசு. சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி, பட்டதாரி மருத்துவர்களை அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பணியமர்த்தி இந்த மருத்துவமுறைகளின் மருந்துகளை எல்லாம் தட்டுபாடின்றி இலவசமாக கிடைக்க செய்து தமிழக அரசு செயலாற்றி வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த மருத்துவத்தை மற்ற மாநிலங்களிலும் பரவும் பொருட்டும், ஆராய்ச்சி செய்யும் பொருட்டும், சித்த மருத்துவத்திற்கு அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கட்டிட வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டும் அதிக நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த மருத்துவ முறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல் திட்டங்களை நிறைவேற்றி மாநில அரசுகளுக்கு நாம் வேண்டு கோள் வைக்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசு சித்த மருந்துக்கு வரி விலக்கு அளித்தது போல நாடு முழுவதும் இந்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி, சோவா-ரிக்பா முறை மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த மருத்துவமுறை மருத்துவங்கள் எல்லா மாநிலங்களிலும் பரவும் வகையில் ஒவ்வொரு மருத்து வத்தை பயிற்றுவிக்கும் கல்லூரிகளையும், எல்லா மாநிலங்களிலும் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவ நூல்களையும் அனைத்து மாநில மொழி களிலும் மொழி பெயர்க்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவ்வாறு அவர் பேசினார்.&lt;/p&gt;hjgh_738391793.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் சேர வேண்டும்: திருமாவளவன் அழைப்பு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48720.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/hjhj_979141562.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Wed, 01 Sep 2010 20:33:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. சென்னையில் இன்று நிருபர் களிடம் கூறியதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&amp;nbsp;விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இறையாண்மை மாநாடு அக்டோபர் மாதம் 10-ந்தேதி சென்னையில் நடக்கிறது. தமிழ் ஈழ விடுதலை போராட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆனாலும் தமிழ் ஈழத்தின் கோரிக்கை இன்னும் நீர்த்து போக வில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள் ஜன நாயக கோரிக்கையை வலி யுறுத்தவும், உலக நாடு களுக்கு வேண்டுகோள் வைக்கும் வகையில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இந்திய இறையாண்மை ஒருமைப்பாட்டுக்கு எதிராக தமிழ் ஈழ கோரிக்கை முன் வைக்கப்படவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இலங்கையில் மறுவாழ்வு பணியை மேற்பார்வையிட எதிர்க்கட்சிகள் அடங்கிய நாடாளுமன்ற குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது வெளியுறவுத்துறை மந்திரி கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். தற்போது நடந்த கூட்டத்தில் அதை மறுத்துள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எனவே நாடாளுமன்ற குழுவை நியமனம் செய்ய வேண்டும். அந்த குழு பார்வை யிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நூற்றுக்கணக்கான கைதி களை அண்ணா பிறந்தநாளை யொட்டி செப்டம்பர் 15-ந் தேதி அன்று விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது என்றாலும் பல இடங்களில் தலித் இனத்தவர் மீது குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 1 ஆண்டில் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த 50 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெற்றுள்ள நிலையிலும் காவல் துறையின் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தலித் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வருவாய் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் பழி வாங்கப் படுவதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள் அரசியல் ஆதாயத்துக்காக தலித் பெயரை பயன்படுத்து கிறார்கள். எனவே முதல்- அமைச்சர், தாழ்த்தப்பட்டோர் நலனில் சிறப்புக்கவனம் கூடுதலாக செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எதிர்வரும் சட்டசபை தேர்தலில், தேர்தல் ஆணை யத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போதிய இடங்களில் போட்டியிடும். அதாவது இரட்டை இலக்க எண்களில் போட்டியிடுவோம். தி.மு.க. கூட்டணியை வலிமைப்படுத்துகின்ற வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்களிப்பு அமையும். மீண்டும் தி.மு.க. கூட்டணியே தமிழ கத்தில் ஆட்சியை கைப்பற்றும். 2011 விடுதலை சிறுத்தைகள் ஆண்டு என்று நாங்கள் ஏற்கனவே பிரகடனப்படுத்தி உள்ளோம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வருகிற சட்டமன்ற தேர்தலில் கட்சியின் கட்ட மைப்பை வலிமைப்படுத்தி அங்கீகாரம் பெறுவது என்ற அடிப்படையில் அதை அறிவித்தோம். 2016-ம் ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் தலைமையில் மாற்று அணியை அமைப்போம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மேல்சபை தேர்தலில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக முதல்- அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். ஆசிரியர்கள், பட்டதாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தி.மு.க. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறப் போவதில்லை. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ் ஈழத்துக்காக போராடக் கூடிய அவர் இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும். நட்பு தொடர வேண்டும். வட மாவட்டங்களில் வலிமை பெற தோழமை நீடிக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பேட்டியின்போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., வன்னியரசு, வெற்றிச்செல்வன், கலைக் கோட்டுதயம், முகமது யூசுப் ஆகியோர் உடன் இருந்தனர்.&lt;/p&gt;hjhj_979141562.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>தி.மு.க. அரசை குறைகூறுவது நியாயம்தானா?-சத்துணவு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகை வழங்கியுள்ளோம்; கருணாநிதி அறிக்கை</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48701--.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/vhj_626140051.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 31 Aug 2010 14:48:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;திராவிட இயக்கம், திராவிடர் கழகமாக போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நிலையில் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - ஒவ்வொரு நேரத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, வேண்டுமென்றே அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவோ - &#34;போர் முனைக்கு வாருங்கள்'' என்று பொதுமக்களைத் திரட்டியதும் இல்லை - தனது கட்சித் தோழர்களை அவ்வாறு கூறி அழைத்ததும் இல்லை. எந்தப் பிரச்சினைக்கான கோரிக்கை முழக்கமிட்ட காலத்திலும், அதற்கான கிளர்ச்சிகளை அமைதியான முறையில், அறவழியில் நடத்திப் பழக்கப்பட்டவைகள் தான். அதனால்தான் அந்தப் போராட்டங்கள் &#34;அறப்போராட்டம்'' என்ற பெயரிட்டே அழைக்கப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தமிழ் மொழிக்குப் பேராபத்து சூழுமோ என்ற நிலையில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்த போதுகூட, 1938-ஆம் ஆண்டு வாக்கில் சென்னை தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாசலில் அறப்போர் வீரர்கள் அணி வகுத்து நின்று - முதல் அணியிலே அவர்கள் யார் யார் என்று பெயர் குறிப்பிடப்பட்டு - குறிப்பிட்ட நாளில் - குறிப்பிட்ட பள்ளியின் வாசலில் - குறிப்பிட்ட தோழர்கள் மாத்திரம் அமைதியான முறையில் மறியல் செய்து கைதாகியிருக்கிறார்களே தவிர - மொழிப் போராட்ட வீரர்கள், பள்ளியை முற்றுகையிடுவார்கள் என்றோ அல்லது இந்தியைக் கட்டாயப்படுத்திய அன்றைய ஆட்சியாளர்களுடைய கோட்டையை முற்றுகையிடுவார்கள் என்றோ கட்சித் தலைமையினால் அறிவிக்கப்படவும் இல்லை; அப்படியொரு போராட்டத்தில் ஈடுபடவும் இல்லை. ஆனால் பொது மக்கள் - ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நம்முடைய கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்களே, அவர்கள் நடத்துகின்ற கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையைக் குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள், அடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள், அதற்கடுத்து, மறியல் என்பார்கள், அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் (கோட்டை) முற்றுகை என்பார்கள். ஓர் அரசு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவர்கள் அணி வகுத்து வரும் படைக்கு முரசு கொட்டி வர வேண்டும் என்றும் - முற்றுகைப் போராட்டத் தளபதிகளுக்கு முகமன் கூறி வரவேற்பு வழங்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இப்படித் தான் கம்டினிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கைப் பேரணிகளாக மாறி &#34;கோட்டை முற்றுகை'' என்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவர்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் &#34;மாவோயிஸ்ட்'' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைக் காணுகிறோம். தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை வன்முறைச் சேட்டைகளை கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட வேண்டுமென்று திட்டமிட்டு, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு ஒரு சிறு களங்கமாவது ஏற்படுத்தினால்தான் அதை வைத்துக் கொண்டு தேர்தலில் தாங்கள் நிற்கவோ அல்லது தங்கள் கூட்டணித் தலைவி, &#34;சிறுதாவூர் சீமாட்டி'', வெற்றி வாகை சூடி மீண்டும் கோலோச்சவோ முடியும் என்ற எதிர்பார்ப்போடு - திட்டங்களைத் தீட்டுகின்றனர், தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதோ பாருங்கள்! அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் சாராம்சமாக என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள்? &#34;சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு முடிவின்படி 30-8-2010 திங்கள் அன்று சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அரசு அதனை தடுத்து நிறுத்திவிட்டது'' - இது அவர்களின் துண்டறிக்கையில் காணப்படும் இந்த அரசைப் பற்றிய குற்றச்சாட்டு.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவர்கள் கோட்டையை நோக்கி வருவார்களாம்! முற்றுகைப் போராட்டம் நடத்துவார்களாம்! அதை அரசும் இந்த அரசின் காவல் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அவர்களுக்கெல்லாம் விருந்து வைத்து மகிழவேண்டுமாம். என்ன இவர்களுடைய கோரிக்கை?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவர்களே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கோரிக்கை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;எத்தனை ஆண்டு கோரிக்கை இது? அவர்களே கூறுகிறார்கள் - 27 ஆண்டு கோரிக்கை என்று! இந்த 27 ஆண்டுகளில் சத்துணவு ஊழியர்கள் என்று இல்லாவிட்டாலும் - தொகுப்பூதிய ஊழியர்கள் என்று ஆயிரக் கணக்கானவர்கள் இந்த அரசில் பணியாற்றினார்களா? இல்லையா? அவர்களுக்கெல்லாம் எந்த ஆட்சியிலாவது பணி நிரந்தரம் செய்யப்பட்டதா?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தொகுப்பூதியத்தில் இருப்பவர்களை, பகுதி நேர ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்குவதற்கு எந்த அரசாவது ஏன் மேற்கு வங்க அரசோ, கேரள அரசோ போன்ற கம்யூனிஸ்ட் அரசுகளாவது முன் வந்தது உண்டா? ஆனால் &#34;ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி'' என்ற கதையாக தமிழ் நாட்டில் மாத்திரம் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துவோம் என்றும், அதற்கு கோட்டையையே முற்றுகையிடுவோம் என்றும், அதைக் காவலர்கள் தடுத்தால், அங்கே ஏற்படுகிற தகராறைப் பெரிதுபடுத்தி, &#34;தமிழக அரசின் உச்ச கட்ட அராஜகம்'' என்று ஊருக்கு ஊர் சொல்லுவோம் என்று பேசுவதும், எழுதுவதும் எந்த வகை ஜனநாயகம் என்று எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;போகட்டும், இந்த கோரிக்கையைக்கூட இந்த அரசு கவனிக்காமல் இருந்ததா? கவனித்த காரணத்தால் தான் அவர்களை முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்க இயலா விட்டாலும், கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசு அளிக்காத சலுகைகளையெல்லாம் இந்த ஆட்சியிலே அளித்திருக்கிறோம். உதாரணமாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால் சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறை கூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியில் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அங்கன்வாடி, மற்றும் சத்துணவு மையங்களில் பணி புரியும் சமையலர், சமையல் உதவியாளர், மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியத்திற்குப் பதிலாக &#34;சிறப்பு கால முறை ஊதியம்'' வழங்க இந்த ஆட்சிக் காலத்தில்தான் முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும் கழக ஆட்சியிலே தான் முதல் முறையாக வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகைக் கால முன்பணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கழக ஆட்சியிலேதான் இவர்களுக்கு மாதந்தோறும் முதல் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கழக ஆட்சியில்தான் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கழக ஆட்சியிலேதான் இவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், சிறப்பு சேமநல நிதித் திட்டம், குடும்ப நலத் திட்டம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு காலத்தில் விடுப்பு, கோடை விடுமுறை காலத்தில் ஊதியம், பயணப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படுகின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சத்துணவு அமைப்பாளர்கள், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆகியோர் தமிழகத்தில் தற்போது பெற்று வரும் ஊதியத்தின் அளவு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த அளவிற்கு கழக அரசின் சார்பில் அவர்களுக்கு சலுகைகள் அளித்து வரும் நிலையில் அவர்கள் இந்த அரசினை எதிர்த்து, கோட்டை முன் முற்றுகைப் போராட்டம் என்று சொல்வது நியாயம்தானா? தற்போதைய சத்துணவுப் பணியாளர்கள் பிரச்சினையில் கோட்டையை முற்றுகையிட வேண்டிய அளவிற்கு என்ன நடந்து விட்டது?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அ.தி.மு.க. ஆட்சியில் &#34;எஸ்மா, டெஸ்மா'' சட்டங்கள் கொண்டு வரப்பட்டதைப் போல தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதா? அல்லது அந்த ஆட்சியில் இரவோடு இரவாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றே தெரியாத அளவிற்கு நிலைமை இருந்ததே அது போல இப்போது ஏதாவது நிலைமையா? அல்லது ஒரே நாளில் லட்சக்கணக்கான அரசு அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதே அது போன்று ஏதாவது தற்போது நடைபெற்று விட்டதா? எதற்காக முற்றுகை போராட்டம்? சத்துணவு பணியாளர்களுக்கு என்று இந்த ஒரு சங்கம் தான் உள்ளதா?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;கடந்த ஆண்டு 21-11-2009 அன்று சத்துணவு பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் சார்பில் எம். பழனிநாதன் போன்றவர்கள், வரதராசன் போன்றவர்கள் எல்லாம் வள்ளுவர் கோட்டத்திலே பல்லாயிரக் கணக்கான சத்துணவு பணியாளர்கள் திரண்டிருந்து எனக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடத்தினார்களே, அந்த அலுவலர்கள் எல்லாம் உண்மையை அறிய மாட்டார்களா? அவர்கள் மத்தியில் நான் அடுக்கடுக்காக ஒன்றன் பின் ஒன்றாக பதினைந்து சலுகைகளை அறிவித்த போது அந்த மண்டபமே எதிரொலிக்கின்ற அளவுக்கு அவர்கள் கையொலி செய்யவில்லையா?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அந்த விழாவிலே பேசியது மாத்திரமல்லாமல், அந்தச் சலுகைகளுக்காக நன்றி தெரிவித்து, பழனிநாதனும், சூரியமூர்த்தியும் அறிக்கைகள் விட்டது இன்றளவும் ஏடுகளிலே உள்ளதே? ஏன், சத்துணவு பணியாளர்களுக்காக 2006ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட போது சட்டப் பேரவையிலேயே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ், பா.ம.க. கட்சியினரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துப் பேசியது 1-9-2006 தேதிய அவை நடவடிக்கை குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளதே!&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;உண்மையிலே சொல்லப் போனால், சத்துணவுப் பணியாளர்களுக்கு இந்த அரசின் மீது எந்தவிதமான குறையும் இல்லை. அவர்கள் அனைவரும் நல்ல மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைத்துக் கொண்டு ஒரு சில சங்கத்தினர் மட்டும், அவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாகவும், ஒரு சில கோவில்களைப் பார்த்து வரலாம் என்று கூறி ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வர முற்படுகிறார்களே தவிர வேறல்ல. மற்ற அலுவலர்களின் சங்கத்தினர் எல்லாம் இது போன்ற கோரிக்கைகளுக்குத் தீர்வு வர வேண்டுமென்று நினைப்பவர்கள் என்னையோ அமைச்சர்களையோ அணுகி தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்து சலுகைகளைப் பெறுகிறார்கள், ஆனால் வேண்டுமென்றே இந்த அரசுக்கு எப்படியாவது கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற நினைப்போடு இருப்பவர்கள் தான் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவர்களின் உண்மை உருவத்தை இந்தச் சங்கங்களில் உறுப்பினர் களாக இடம் பெற்றிருப்பவர்கள், வேறு எந்த ஆட்சிக் காலத்திலாவது அல்லது வேறு எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற சலுகைகள் கிடைத்துள்ளதா என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டாமா? &#34;குடிதழீஇக் கோலோச்சும்'' குறள் நெறி நடக்கும் இந்த அரசைக் குறை கூறுவது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள்!&lt;br /&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.&lt;/p&gt;vhj_626140051.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48700.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/chfd_486639098.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 31 Aug 2010 14:47:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;அ.தி.மு.க. அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று, வட சென்னை, தென் சென்னை, காஞ்சீபுரம் கிழக்கு, கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, கடலூர் கிழக்கு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் வடக்கு, திருநெல்வேலி புறநகர், மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களின் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 35 பேர்களும், 77 வக்கீல்களும், 125 இஸ்லாமிய பெண்களும், நகர வார்டு உறுப்பினர்கள் 3 பேர்களும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஒருவரும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் உள்பட 800 மகளிர் உள்ளிட்ட 9 ஆயிரத்து 664 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில், பொறியாளர் (எம்.எஸ். சாப்ட்வேர்) இரா.ராஜேஸ்வரன் தலைமையில், மாணவர்கள் எம்.சிங்காரம், என்.ஏ.யோகேஷ், எம்.இளங்கோ, பி.அருண்குமார், சி.பிரதீப்குமார் ஆகியோருடன் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் 166 மாணவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதுபோல, காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சீபுரம் ஒன்றியம் மற்றும் நகரத்தில் வசிக்கும் முஸ்லிம் சமுதாய பெண்கள் வி.எம்.ஓ.குர்ஷீத், எச்.எம்.பாத்திமா, எஸ்.ஜக்கியா, எஸ்.டி.ரகீமா, எஸ்.கே.சித்திகா, ஏ.பரகத்நிஷா, எஸ்.ரைசுன்னிசா உள்ளிட்ட 125 பேர்கள் இணைந்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பா.ம.க. தென் சென்னை மாவட்ட அமைப்புச் சாரா தொழிற்சங்கத்தலைவர் இரா.அய்யனார் தலைமையில், அக்கட்சியின் 145-வது வட்டச் செயலாளர் சத்யராஜ், 146-வது வட்டச் செயலாளர் குமார், 96-வது வட்டத் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 100 பேர்களும், வட சென்னை மாவட்டம், பா.ம.க. துறைமுகம் பகுதி செயலாளர் சி.நந்தகுமார், துறைமுகம் பகுதி இளைஞர் அணிச் செயலாளர் கோட்ரஸ் மு.சீனா மற்றும் பா.ஜ.க.வின் வட சென்னை மாவட்ட இளைஞர் அணி முன்னாள் பொருளாளர் ஆர்.கார்த்திக், வட சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிதி செயலாளர் வண்ணை இரா.சேகர் உள்ளிட்ட 22 பேர்களும், தென் சென்னை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஸ்ரீதரன், மதுரை மாநகர் மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமயநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.காளிராஜன் ஆகியோரும் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதே போல், தமிழ் மாநில விஸ்வகர்ம ஒர்க்கர்ஸ் டினியன் மாநில பொதுச் செயலாளர் கோவை ராஜன், இச்சங்கத்தை கலைத்துவிட்டு அவரும், மாநில நிர்வாகிகள் 15 பேர்களும் ஆக மொத்தம் 800 பெண்கள் உள்ளிட்ட 9 ஆயிரத்து 664 பேர் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் மத்தியில் ஜெயலலிதா பேசியதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இத்தனை பொறியியல் கல்லூரி மாணவர்கள், இன்று அ.தி.மு.க.வில் இணைவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த நாட்டின் எதிர்காலமே, உங்களை போன்ற இளைஞர்களின் கரங்களில்தான் உள்ளது. நாளை இந்த நாட்டை நடத்தப்போகிறவர்கள், இந்த நாட்டை ஆளப்போகிறவர்கள் நீங்கள்தான். எத்தகைய நம்பிக்கையுடன் நீங்கள் அ.தி.மு.க.வில் இணைய வந்தீர்களோ, அந்த நம்பிக்கை வீண் போகாது என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இஸ்லாமிய சமுதாய பெண்கள் இணையும் போது, இத்தனை பெண்கள். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சகோதரிகள் இன்று கட்சியில் இணைய வந்துள்ளதை கண்டு நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அ.தி.மு.க. என்றைக்குமே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.&lt;/p&gt;chfd_486639098.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>டாஸ்மாக்கில் மேலும் 39 வகை மதுபானங்கள்: தமிழக அரசு ஒப்புதல்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48697.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/ghj_146640507.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 31 Aug 2010 14:42:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதற்காக சுமார் 6700 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிது. டாஸ்மாக் கடைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் வரும் வருமானம் தமிழக அரசுக்கு மிக முக்கிய வருமானமாக உள்ளது. இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;டாஸ்மாக் மதுபான கடைகளில் ரம், விஸ்கி, பிராண்டி போன்ற மது வகைகள் விற்கப்படுகின்றன. பல பிராண்டுகளில் இந்த மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வருமானத்தை அதிகரிக்க செய்வதற்காக மேலும் 39 மதுபான வகை தயாரிப்புக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;39 வகை மதுபானங்களை தயாரித்து கொடுக்கும் உரிமை மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லிரிஸ், சதர்ன் அக்ரி பியூரன் இன்டஸ்டிரிஸ், எம்.பி.டி. ஸ்டில் சிரிஸ், எஸ்.என்.ஜே. டிஸ்டில் சிரிஸ், மோகன் பிரவேரிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.&lt;/p&gt;ghj_146640507.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>ஜெயலலிதா, இன்று கொடநாடு பயணம்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48689.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/nhj_836391909.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 31 Aug 2010 14:27:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த சில மாதமாக தீவிரபிரசாரம் செய்து கோவை, திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். இதனை தொடர்ந்து சென்னை வானகரத்தில் கட்சி பிரமுகர்கள் இல்ல 20 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து பேசினார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஸ்ரீரங்கம் சென்று சாமி தரிசனமும் செய்தார். நேற்று தலைமை கழகம் வந்து, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த தொண்டர்களை வரவேற்று பேசினார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ஜெயலலிதா இன்று காலை கொடநாடு புறப்பட்டுச் சென்றார். அவருடன் சசிகலாவும் சென்றார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காலை 11 மணிக்கு அ.தி.மு.க. பிர முகர்கள் ஜெயலலிதாவை வழியனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;nhj_836391909.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 21 பேர் “டிஸ்மிஸ்”</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/48688.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/dfgh_813077561.jpg" />
										
								
							<category>தமிழ்நாடு</category>
							<pubDate>Tue, 31 Aug 2010 14:25:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) சார்பில் கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;நேற்று நடந்த இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சத்துணவு ஊழியர்கள் பங்கேற்க சென்னை வந்தனர். பஸ், வேன் போன்ற வாகனங்களில் சென்னை நகருக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நகருக்குள் நுழைந்தனர். கடற்கரை சாலை, எழிலகம், கண்ணகி சிலை உள்ளிட்ட பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்த சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2000 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்ட 57 பேர் மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நோட்டீஸ் கொடுக்காமல் நடத்தி வந்ததால் அதன் முக்கிய நிர்வாகிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சமூகநலத்துறை இயக்குனர் வாசுகி கூறியதாவது:-&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றால் கலெக்டர்களிடம் அனுமதி பெறவேண்டும். சம்பந்தப்பட்ட துறை கலெக்டருக்கோ, அரசுக்கோ நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் நோட்டீஸ் கொடுக்காமல் முற்றுகை போராட்டம் நடத்துகிறார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சங்க நிர்வாகிகளை அழைத்து கடந்த 25-ந்தேதி பேசினோம். இந்த அரசு சத்துணவு பணியாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கி உள்ளது என்பதை எடுத்து கூறினோம். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் சலுகை வழங்கும் அரசிடம் மீண்டும் கோரிக்கை வைக்க முடியும் எனக்கூறி தவறான உதாரணங்களை பின்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;போராட்டத்தில் ஈடுபட விருப்பம் இல்லாத பெண்களை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று உள்ளனர். அவர்களது குழந்தைகளையும் உடன் அழைத்து கஷ்டப்படுத்தினர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அனுமதி பெறாமல், நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டத்தை முன்நின்று நடத்திய 21 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை பணியில் இருந்து நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த நடவடிக்கையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எடுத்துள்ளனர். நேற்று இரவு 7 பேருக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இன்று கொடுக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் மற்ற ஊழியர்களை தூண்டி போராட்டத்தை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளனர்.&lt;/p&gt;dfgh_813077561.jpgs r</description>
							
						
					</item>
				
			
		
<description>விபரம் - செய்திகளின் தொகுப்பு</description>
</channel>
</rss>