முகப்பு | செய்திகள் | இந்தியா | சுப்ரீம் கோர்ட்டில் நிகர்நிலை பல்கலைக்கழக வழக்கு ஏப்ரல் 13-ந் தேதிக்கு தள்ளி வைப்பு

சுப்ரீம் கோர்ட்டில் நிகர்நிலை பல்கலைக்கழக வழக்கு ஏப்ரல் 13-ந் தேதிக்கு தள்ளி வைப்பு

image

44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்தது.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு எடுத்தது பற்றி விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டது.

இது தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாகர் முன்னிலையில் வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் தங்களது பதில்களை 3 வாரத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை ஏப்ரல் (அடுத்த) மாதம் 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தும் உத்தரவிட்டனர்.